ரஜினியை அப்பா என்று அழைக்கும் தீபிகா!!!

Tuesday, May, 01, 2012
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக கோச்சடையானில் நடிக்கும் தீபிகா படுகோனே அவரை அப்பா என்றே அழைக்கிறாராம்.

இன்றைய தேதிக்கு கோலிவுட், மாலிவுட், டோலிவுட், பாலிவுட் என்று அனைத்து உட்களைச் சேர்ந்த நடிகைகளும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறார்கள். ஏன் நம்ம பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா கூட ரஜினியுடன் நடிக்க ஆசையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

அப்பேர்பட்ட ரஜினியுடன் கோச்சடையானில் ஜோடியாக நடிக்கிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. அவரும், ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். படத்தில் ஜோடியாக நடித்தாலும் கேமராவுக்கு பின்னால் ரஜினியை தீபிகா பாசத்துடன் அப்பா என்றே அழைக்கிறாராம்.

கோச்சடையான் படப்பிடிப்பில் தான் சௌகரியமாக உணர உதவிய சவுந்தர்யாவுக்கு நன்றி தெரிவித்து தீபிகா டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதன் மூலம் தான் அவர் ரஜினியை அப்பா என்று அழைப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சவுந்தர்யா டுவிட்டரில் கூறுயிருப்பதாவது,

கேரளாவில் கோச்சடையானின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளோம். தீபிகாவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. தீபிகா ஒரு டார்லிங் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு தீபிகாவின் டுவீட்,

சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு நன்றி. அப்பா, அம்மாவுக்கு எனது அன்பை தெரிவிக்கவும், விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

பதிலுக்கு சவுந்தர்யா டுவீட்,

உங்களை இயக்கியதில் மகிழ்ச்சி. விரைவில் சந்திப்போம். அப்பா, அம்மா மற்றும் படக்குழு தங்கள் அன்பை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

Comments