துபாயில் நமீதா பங்கேற்கும் நம்பிக்கை ஸ்வரங்கள்!!!

Wednesday,May,16,2012
துபாய்::அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் நம்பிக்கை ஸ்வரங்கள் 2012 வரும் 24ம் தேதி துபாயில் நடக்கிறது.

அமீரகத் தமிழ் சங்கம் கடந்த 2010ல் இருந்து ஆண்டு தோறும் மாற்றுத்திறனாளிகளுக்காக நம்பிக்கை ஸ்வரங்கள் என்ற கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி வரும் மே மாதம் 24ம் தேதி மாலை 7 மணிக்கு துபாயில் உள்ள இந்தியனை ஹை ஸ்கூலில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கோலிவுட் நடிகை நமீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மாற்றுத்திறனாளிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் சூப்பர் சிங்கர்ஸ் அஜேஷ், சந்தோஷ், சத்ய பிரகாஷ், பூஜா, பிரசன்னா, பார்வையற்ற திருமதி சுசீலா ஆகியோர் இன்னிசை நிகழ்ச்சியும், மானாட மயிலாட கோகுல்நாத்தின் வெரைட்டி நிகழ்ச்சியும் நடக்கிறது.

நிகழ்ச்சிகளை இப்படிக்கு ரோஸ் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் வரும் 17,18 ஆகிய தேதிகள் வழங்கப்படும். நுழைவுச் சீட்டுக்கு http://www.uaetamilsangam.com/upcomingevent.asp என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Comments