இந்தியில் பட வாய்ப்புகள்: மும்பையில் தங்க வீடு பார்க்கிறேன்- பிரபுதேவா!!!

Tuesday, ,May, ,15, 2012
பிரபுதேவா இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கிய 'வாண்டட்' படம் ஹிட்டானதால் அங்கு பட வாய்ப்புகள் குவிகிறது. அக்ஷய்குமார் நடிக்கும் 'ரவுடி ரத்தோர்' படத்தை தற்போது இயக்கி வருகிறார். இப்படம் ஜூன் மாதம் ரிலீசாகிறது. 'எனிபடி கேன் டான்ஸ்' என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

மேலும் சல்மான்கான், அக்ஷய்குமார் ஆகியோருக்கு தலா ஒரு படங்கள் இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதற்காக நீண்ட நாட்கள் மும்பையில் இருக்க வேண்டி உள்ளதால் அங்கு தங்குவதற்கு வீடு பார்க்கிறார். நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் நடப்பதாக இருந்த திருமணம் நின்றுபோனது. இருவரும் காதலில் முறிவு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதுவும் பிரபுதேவா மும்பை குடிபெயர்வதற்கு இன்னொரு காரணமாக அமைந்துள்ளது.

இதுபற்றி பிரபுதேவாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் மும்பையில் தங்க முடிவு செய்து இருப்பது உண்மைதான். அங்கு இது வரை வீடு எதுவும் வாங்கவில்லை. விரைவில் வாங்குவேன். மும்பையிலேயே நிரந்தரமாக தங்கி விடமாட்டேன். சென்னையை விட்டு நான் எங்கே போக முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments