சென்சார் சொல்லியும் கேட்கவில்லை : குத்துபாட்டை நீக்க இயக்குனர் மறுப்பு!!!

Wednesday,May,16,2012
சென்சார் போர்டு நீக்கச் சொல்லியும் குத்துப்பாட்டை நீக்க மறுத்ததால் படத்துக்கு ‘ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அருண்ராஜ், லாவண்யா, பிரியா உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘முத்து பேச்சி. இப்படத்தை இயக்கும் கே.ஜி.சாய்ராம் கூறியதாவது: ஹீரோவுக்கு ஒரு பெண்ணுடன் காதல் மலர்கிறது. அந்த காதலால் ஏற்படும் பின்விளைவுகள் மோதலாக மாறி கலவரமாகிறது. இந்த காதல் வெற்றி பெறுகிறதா என்பதை நட்பை மையமாக வைத்து படம் கூறுகிறது. திருநெல்வேலி, வள்ளியூர், தளவாய்புரம் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது.

இப்படத்தை சென்சாருக்கு போட்டு காட்டியபோது மது குடிப்பதுபோல்வரும் காட்சிகளை நீக்கச் சொன்னார்கள். லாவண்யா நடனம் ஆடிய ‘சரக்கு சரக்கு சரக்குÕ என்ற வரிகளுடன் தொடங்கும் குத்து பாடலை நீக்கினால் ‘யூÕ சர்டிபிகேட் தருவதாக சென்சார் அதிகாரிகள் கூறினர். ரூ.3 லட்சம் செலவில் இப்பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கினால் கதை வலுவிழந்துவிடும் என்பதால் நீக்க மறுத்துவிட்டேன். இதையடுத்து ‘ஏ சான்றிதழ் கொடுத்தார்கள். தணிக்கை விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் தரமான படங்களில்கூட ஒன்றிரண்டு காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு ‘ஏ சான்று கொடுக்கப்படுகிறது. இது வருத்தமளிக்கிறது

Comments