ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி அமைத்த மோர் பந்தல்!!!

Wednesday,May,02,2012
ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் மோர் பந்தல் அமைப்பது வழக்கம். கோடையில் மக்கள் தாகத்தை தணிக்கும் பொருட்டு பணியாட்கள் நியமித்து நேரடி மேற்பார்வையில் இந்த மோர் பந்தலை அமைத்து வருகிறார்.

2008 ஆம் ஆண்டில் இருந்து இதை அவர் செய்து வருகிறார். ஐந்தாவது வருடமாக இந்த தடவையும் மோர் பந்தல் அமைத்துள்ளார். இந்த மோர் பந்தல் இன்று முதல் செயல்பட துவங்கியது. ராகவேந்திரா மண்டபத்தில் விசேஷ பந்தல் அமைத்து பெரிய பாத்திரத்தில் மோர் ஊற்றி வைக்கப்பட்டது.

அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு ஜில்லென்று குளிர்ந்த மோர் வழங்கப்பட்டது. ஒரு நாளைக்கு 200 லிட்டருக்கும் மேல் தயிர் இதற்காக செலவிடப்படுகிறது. மோருக்காக வெண்ணை எடுக்காத பால் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது.

மோர் பந்தலுக்குள் ரஜினியின் பெயரோ படமோ இல்லை. அவர்தான் மோர் பந்தலை அமைத்துள்ளார் என்ற விவரம் எதுவும் இடம் பெறவில்லை. காலை 9 மணி முதல் மாலை 3மணி வரை மோர் பந்தல் செயல்படுகிறது.

ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை மோர் அருந்தி செல்கின்றனர். கால் மணி நேரத்துக்கு ஒருமுறை கல்யாண மண்டபத்துக்குள் இருந்து பெரிய பாத்திரத்தில் மோர் கொண்டு வரப்பட்டு, பந்தலில் உள்ள எவர்சில்வர் அண்டாவில் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு

Comments