கலைஞர், கமல் கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழா!!!


Wednesday,May, 23, 2012
வைரமுத்து மூன்றாம் உலகப்போர் என்ற பெய‌ரில் வார இதழில் தொடர் எழுதி வருகிறார். இதனை புத்தகமாக அடுத்த மாதம் சென்னையில் வெளியிடுகிறார்கள்.

தண்ணீர்‌‌ப் பிரச்சனையை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் இந்த தண்ணீர் காவியத்தை கருணாநிதி வெளியிட கமல்ஹாசன் பெற்றுக் கொள்கிறார். புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளும் இன்னொருவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

இதேபோல் இளையராஜாவின் பால் நிலாப் பாதை என்ற புத்தகமும் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. இளையராஜாவின் புத்தகத்தை பல வருடங்களுக்கு முன் வெளியிட்ட போது கமலும், ர‌ஜினியும் கலந்து கொண்டனர். இந்தமுறை கமல் கலந்து கொள்கிறார். ஜூன் 4 இந்த புத்தக வெளியீடு நடக்கயிருக்கிறது.

Comments