தெலுங்கு படங்களை ஏற்க அனுஷ்கா மறுப்பது ஏன்?!!!

Wednesday,May,02,2012
கடந்த ஒன்றரை வருடமாக தெலுங்கில் புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார் அனுஷ்கா. இதனால் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தெலுங்கு படங்களை அனுஷ்கா புறக்கணிக்கிறாரா என்றதற்கு தெலுங்கு திரையுலக பிரமுகர் ஒருவர் கூறியதாவது: கடந்த ஒன்றரை வருடமாக அனுஷ்கா தெலுங்கில் ஒரு புதிய படம் கூட ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார். ஆனால் தமிழில் நிறைய படங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார். தற்போது நான்குக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார். விக்ரமுடன் ‘தாண்டவம்Õ, கார்த்தியுடன் ‘அலெக்ஸ் பாண்டியன்Õ, ஆர்யாவுடன் ‘இரண்டாம் உலகம்Õ, சூர்யாவுடன் சிங்கம் 2 ஆகிய படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் தமாருகம்,

பிரபாஸுடன் ‘வாரதிÕ என ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரண்டு படங்கள் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. அவரது சினிமா கேரியரை பார்க்கும்போது தமிழைவிட தெலுங்கில் பெரிய வெற்றி படங்களை தந்திருக்கிறார். ஆனாலும் தற்போது அவர் தெலுங்கு படங்களை ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி இருப்பதற்கு காரணம் என்ன என்று புரியவில்லை. 30 வயதை கடந்துவிட்ட அனுஷ்கா தற்போதுள்ள இளம் நடிகைகளின் போட்டியை எதிர்கொள்வதை தவிர்க்கவே இந்த முடிவு எடுத்திருப்பார் என்று டோலிவுட் திரையுலகினர் கருதுகின்றனர். அதேநேரம், கோலிவுட்டில் மார்க்கெட்டை நம்பி இந்த முடிவு எடுத்திருக்கலாம் அல்லது தெலுங்கு திரையுலகில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

Comments