தயாரிப்பாளர்கள் புறக்கணித்தனர்: சோனியா அகர்வால் வருத்தம்!!!

Friday, ,May, ,25, ,2012
சென்னை::படத்தை முடித்துக் கொடுத்ததும் என்னை புறக்கணித்துவிட்டனர் என்றார் சோனியா அகர்வால். இதுபற்றி அவர் கூறியதாவது: மலையாளத்தில் நான் அறிமுகமான ‘கிருஹநாதன்‘ படம் ரிலீஸ் ஆகிவிட்டது. ஆனால் அதுபற்றி யாருக்குமே தெரியவில்லை. ரிலீஸுக்கு ஒரு நாளைக்கு முன்புதான் என்னிடம் தகவல் தெரிவித்தனர். மிகவும் குறுகிய அவகாசமே இருந்ததால் கேரளா செல்ல முடியவில்லை. இது நல்ல படம். பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்கிரிபட். ஒரு குடும்பத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் பொறுப்புள்ள பெண்ணின் கதை.

இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி மாற்றி கூறப்பட்டதால் பட குழுவே குழப்பத்தில்தான் இருந்தது. முதலில் மார்ச் மாதம் ரிலீஸ் என்று தயாரிப்பாளர் என்னிடம் உறுதி அளித்தார். பின்னர் ஏப்ரல் மாதத்துக்கு மாற்றப்பட்டது. கேரளாவில் சிறந்த தியேட்டர்கள் கிடைப்பது கடினம். அதைவிட கடினம் உண்மையான ஒரு தயாரிப்பு குழு அமை வது. எந்தவொரு படமாக இருந்தாலும் அதற்கு விளம்பரம் அவசியம். விளம்பரம் இல்லாத படம் அதை கொல்வதற்கு சமம். இதுவரை என்னை படம் பார்க்கக்கூட அழைக்கவில்லை. அதற்காக காத்திருக்கப் போவதில்லை. விரைவில் கேரளா சென்று அப்படத்தின் இறுதி நிலை என்ன என்பதை அறிவேன். இவ்வாறு சோனியா அகர்வால் கூறினார்.

Comments