ஜெயம் ரவியுடன் நெருக்கமாக நடிக்க மறுத்ததால் நயன்தாரா நீக்கம்: திரிஷா ஜோடியானார்!!!

Wednesday,May,02,2012
ஜெயம் ரவி பூலோகம் என்ற படத்தில் நடிக்கிறார். கல்யாண் கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இதில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அவர் படத்தில் நடிக்க பல்வேறு நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது.

ஜெயம் ரவியுடன் நெருக்கமாக காட்சிகளில் நடிக்க மாட்டேன். ஆடை குறைத்து கவர்ச்சியாகவும் நடிக்க மாட்டேன் என்று கூறினாராம். அத்துடன் சம்பளமும் அதிகமாக கேட்டுள்ளார். இதனால் படத்தை தயாரிக்கும் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் அதிர்ச்சியானது.

கதைப்படி கதாநாயகி கவர்ச்சியாகவும் நாயகனுடன் நெருக்கமாகவும் நடிக்கவேண்டும் என்று இயக்குனர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. நயன்தாரா மறுத்ததால் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

நயன்தாராவுக்கு பதில் ஜெயம் ரவி ஜோடியாக திரிஷாவை தேர்வு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இரண்டாவது தடவையாக மீண்டும் சேர்ந்துள்ளனர்.

பூலோகம் படத்தில் இருந்து நீக்கியதால் நயன்தாரா அதிர்ச்சியாகி உள்ளார். நீக்கத்துக்கு காரணம் திரிஷாதான் என அவர் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார். இருவருக்கும் குருவி படத்தில் இருந்தே பனிப்போர் நீடித்து வருகிறது. அப்படத்தில் நயன்தாராவை தான் கதாநாயகியாக முதலில் தேர்வு செய்தனர். ஆனால் திடீரென அவரை மாற்றி விட்டு திரிஷாவை ஜோடியாக்கினர்.

சதி செய்து தனது வாய்ப்பை தட்டி பறித்து விட்டதாக நயன்தாரா பொருமினார். பதிலடியாக திரிஷா நடிப்பதாக இருந்த தெலுங்கு பட மொன்றை நயன்தாரா பறித்தார். இப்போது மீண்டும் பூலோகம் படம் மூலம் தகராறு தீவிரமாகி உள்ளது.

Comments