ஐஸ்வர்யா உண்டானாலும் நியூஸு, குண்டானாலும் நியூஸு!!!

Saturday, May, 05, 2012
பிரசவத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் ரொம்ப குண்டாகிவிட்டார் என்பது தான் தற்போது மீடியாக்களில் விவாதிக்கப்படும் ஹாட் டாப்பிக்.

உலக அழகிப் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த ஐஸ்வர்யா ராய் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். பாலிவுட், கோலிவுட், டோலிவுட், பெங்காலி மொழிப்படங்களில் நடித்துள்ளார். அவர் அழகுக்கு மட்டுமல்ல நடிப்பிற்கும் பெயர் போனவர். அபிஷேக் பச்சனை திருமணம் செய்த பிறகும் மார்க்கெட் அடியாகாமல் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார்.

சொல்லப்போனால் திருமணத்திற்குப் பிறகு தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹீரோயின் என்ற இந்தி படத்தில் ஒப்பந்தமான அவர் கர்ப்பமானதால் அதில் இருந்து விலகினார். அவர் பிள்ளையைப் பெற்றெடுப்பதற்குள் மக்களும், மீடியாவும் தான் படாதபாடு பட்டுவிட்டார்கள். அவருக்கு கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்து இத்தனை மாதங்கள் ஆகியும் அதன் பெயர் என்னவென்றே தெரியவில்லை. பிரசவத்திற்குப் பிறகு நடிக்காமல், பொது நிகழச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருக்கும் ஐஸ் குண்டாகிவிட்டாராம். இப்போது அது தான் மீடியாக்களில் வலம் வரும் ஹாட் டாப்பிக். கடந்த வாரம் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி கொடுத்த பார்ட்டிக்கு கணவர் அபிஷேக்குடன் சென்ற அவரை யாரோ ஒரு போட்டோகிராபர் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதில் அவர் குண்டாக வயதானவர் போல் காணப்பட்டுள்ளார். எத்தனையோ நடிகைகள் குழந்தை பெற்ற பிறகு உடனே வெயிட்டைக் குறைத்துள்ளார்கள். அப்படி இருக்கையில் பிரசவம் முடிந்து இத்தனை மாதமாகியும் ஐஸ் ஏன் வெயிட்டைக் குறைக்கவில்லை என்று ஆளாளுக்கு விமர்சித்து வருகிறார்கள்.

மீண்டும் சிக்கென்ற ஐஸை பார்க்கவே முடியாதா என்று பலரும் முணுமுணுக்கின்றனர்.

Comments