என்னை சில்க் என்று கூறுவது பிடிச்சிருக்கு - பிந்து மாதவி!!!

Saturday, May, 05, 2012
இரண்டுப் படங்களிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதால் மீடியாவின் பார்வைக்கு மீண்டும் வந்திருக்கிறார் பிந்து மாதவி. கழுகு படத்தில் கடைசியாக நடித்தவர் இப்போதும் தெலுங்கு வாய்ப்புகளை கைவசம் வைத்திருக்கிறார். தன்னைப் பற்றிய அவரது ஓபன் ஸ்டேட்மெண்ட் உங்களுக்காக.

உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்... பிறந்தது, படித்தது, சினிமாவுக்கு வந்தது..?

நான் பிறந்தது ஆந்திராவிலுள்ள மதனப்பள்ளி. அப்பா கமர்ஷியல் டாக்ஸ் டிபார்ட்மெண்டில் அசிஸ்டெண்ட் கமிஷனராக இருந்ததால் திருப்பதி, நெல்லூர், குண்டூர், விஜயவாடா, ஹைதராபாத்னு நிறைய இடங்கள் மாறிகிட்டே இருந்தோம். பிளஸ் ஒன்னுக்கு அப்புறம் சென்னை. என்னுடைய பயோ டெக்னால‌ஜி டிகி‌ரியை வெல்லூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னால‌ஜியில் முடிச்சேன்.

சினிமாவுக்கு வந்தது...?

நான் எப்போதுமே ஒரு ஆவரே‌ஜ் ஸ்டூடண்டாதான் இருந்தேன். என்னோட இன்ட்ரஸ்ட் கல்‌ச்சுரல் ஆக்டிவிட்டீஸ்லதான் இருந்திச்சி. நிறைய கல்‌ச்சுரல் புரோக்கிரா‌மில் கலந்துகிட்டு ப‌ரிசெல்லாம் வாங்கினேன். அப்படியே மாடலிங்குக்கு வந்திட்டேன். முதலில் சரவணா ஸ்டோர்ஸ் சா‌ரி விளம்பரம். டாட்டா கோல்டு விளம்பரத்தில் என்னைப் பார்த்துட்டு இயக்குனர் சேகர் கம்முலாவும், அனிஸ் குருவில்லாவும் நடிக்கக் கூப்பிட்டாங்க. அந்தப் படம்தான் ஆவ‌க்காய் பி‌ரியாணி.

மாடலிங்கிற்கே அப்பா அனுமதிக்கவில்லைன்னு சொல்லியிருக்கீங்க. எப்படி நடிக்க சம்மதம் கிடைச்சது?

மாடலிங் பண்ணப் போறேன்னு சொன்னதுக்கு அப்பா சம்மதிக்கலை. ஆறு மாசம் நானும் அவரும் பேசிக்காம இருந்தோம். அப்புறம்தான் பெர்மிஷன் கிடைச்சது. சினிமாவைப் பொறுத்தவரை சேகர் கம்முலாவின் நல்ல டைரக்டர்ங்கிற க்ளீன் இமே‌ஜ்தான் அனுமதி கிடைக்க காரணம்.

ஆவக்காய் பி‌ரியாணியில் ஊறுகாய் விற்கும் பெண், வெப்பத்தில் விலைமாது, கழுகிலும் கிராமத்துப் பெண் வேடம். இது உங்களின் நகரத்துப் பெண் என்ற ஒ‌ரி‌ஜினல் இமேஜுக்கு முற்றிலும் மாறுபட்டவை இல்லையா?

மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கவே நான் விரும்பறேன். வெப்பம் எனக்கு முதல் தமிழ்ப் படம். முதல் படத்திலேயே விலைமாது கேரக்டர் பண்ணணுமா என்று பலரும் கேட்டாங்க. எனக்கு அது தப்பா தெ‌ரியலை. தபு போன்ற நடிகைகள் அந்த மாதி‌ரி கதாபாத்திரத்தை இப்போதும் செய்ய‌த் தயாராக இருக்காங்க. தவிர நான் நான்கு தெலுங்குப் படங்களுக்குப் பிறகுதான் தமிழில் நடிக்க வந்தேன். முக்கியமான விஷயம் என்னுடைய இரண்டாவது படம் பம்பர் ஆஃப‌ரிலும் அதுமாதி‌ரி ஒரு கேரக்டர்தான் செய்திருந்தேன்.


FILEகழுகு படம் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறதே...?

எல்லா நடிகைகளும் ஆசைப்படடுகிற ஒரு கேரக்டர். எப்போதும் சோகம் ததும்புகிற பார்வை, காதலை வெளியே சொல்ல முடியாத வலின்னு அப்படியே என்னுடைய கேரக்டருக்கு எதிரான வேடம். ரசிச்சு நடித்தேன். உண்மையிலேயே புது அனுபவமாக இருந்தது. நண்பர்கள் படம் பார்த்து பாராட்டிய போது சந்தோஷமாக உணர்ந்தேன்.

சிலக் மாதி‌ரி இருக்கிறீங்க என்ற கமெண்டை எப்படி எடுத்துக்கிறீங்க?

இறந்த பிறகும் இந்தியா முழுக்க தெ‌ரிஞ்ச நடிகை என்றால் அது சில்க்தான். அவரைப் போல் யாராலும் வர முடியாது. சில்க் என்று சொல்வதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா தெ‌ரியாது. ஆனா அப்படி சொல்லப்படுவதை விரும்பறேன்.

உங்கள் பிளஸ் பாயிண்ட் எது என்று நினை‌க்கிறீங்க?

என்னுடைய கண்கள். அவை பெ‌ரிசா இருப்பதால் ஒரு நடிகையாக உணர்ச்சிகளை கண்களில் கொண்டு வர முடியுது.

நீர்ப்பறவையிலிருந்து திடீரென நீக்கப்பட்டதுக்கு என்ன காரணம்?

அது பற்றி பேச வேண்டாம்னு நினைக்கிறேன். ரொம்ப நல்ல கேரக்டர். அதுபோல் கேரக்டர் அமைந்தால், வாய்ப்பும் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். இப்போதைக்கு இது போதும்.

Comments