நயன்தாராவா? த்ரிஷாவா? தப்பித்த பிரபுதேவா!!!

Saturday, May, 19, 2012
நடிகர் பிரபுதேவா இந்தியில் ‘ரவுடி ரத்தோர்’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தியில் இது தான் பிரபுதேவாவிற்கு முதல் படம். இப்போது பிரபுதேவா மும்பையிலேயே தங்க முடிவெடுத்துள்ளார்.

இது பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பிரபுதேவா ” நான் இயக்கும் ’ரவுடி ரத்தோர்’ படம் தமிழில் வெளிவந்த ’சிறுத்தை’ படத்தின் ரீமேக். அந்த படத்தில் வரும் ‘ஜிந்தாத்தா ஜிந்தாத்தா’
பாடலுக்கு விஜய் நடமாடினால் நன்றாக இருக்கும் என விரும்பி விஜய்யை அழைத்தேன். என் அழைப்பை மறுக்காமல் வந்து விஜய் நடனமாடினார்.

இந்தி படத்தில் விஜய் நடிக்க விரும்பினால் அந்த படத்தை இயக்க நான் தயார். மும்பையில் வீடு பார்த்தது இனி அங்கேயே தங்கி விட முடிவு செய்ததால் தான். அடுத்தடுத்து அதிக கமிட்மெண்ட்ஸ் இருக்கிறது. தொடர்ந்து நிறைய படங்களை இயக்குகிறேன்.

தமிழ் படங்களை இயக்கவும் ஆர்வம் இருக்கிறது. ஆனால் அதற்கு குறைந்தது 15 வருடங்கள் ஆகும். உண்மையாகத்தான் சொல்கிறேன். தமிழுக்கு வர 15 வருடங்கள் ஆகும். ஏனென்றால் இங்கு நிறைய வேலைகள் இருக்கிறது” என்று கூறினார்.

அதன் பிறகு பிரபுதேவாவிடம் நயன்தாரா அளித்துள்ள ஒரு பேட்டியில், அவர் உங்களுக்கு உண்மையாக இருந்ததாகவும், நீங்கள் தான் உண்மையாக இல்லை எனவும் கூறியுள்ளாரே?

த்ரிஷாவுடன் நீங்கள் நெருக்கமாக இருப்பது போல் வெளியிட்டுள்ள போட்டோ யாரையோ கஷ்டப்படுத்ததான் என்கிறார்களே?

நயன்தாரா, த்ரிஷா, ஹன்ஸிகா, சோனாக்ஷி ஆகியோருடன் உங்களை இணைத்து வரும் கிசுகிசுக்களை கேட்கும் போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

என்று கேட்டதற்கு “போது வேறு கேள்விகள் வேண்டாம்” என்று கூறிவிட்டாராம். எவ்வளவோ வற்புறுத்தி கேட்டும் கூட அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தப்பித்து சென்றுவிட்டார் பிரபுதேவா.

Comments