பாலிவுட்டைக் கலக்க கர்நாடகத்திலிருந்து பாயும் இன்னொரு அழகு நதி - நிதி!!!

Monday, ,May, 28, 2012
ஐஸ்வர்யா ராய், ஷில்பா ஷெட்டி, தீபிகா படுகோன் ஆகியோரைத் தொடர்ந்து இன்னொரு அழகிய நடிகை பாலிவுட்டுக்குப் படையெடுத்துள்ளார். ஐஸ்வர்யா, ஷில்பாவைப் போல இவரும் பாலிவுட்டை கலக்குவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ஐஸ்வர்யா ராய், ஷில்பா ஷெட்டி, தீபிகா படுகோன் ஆகியோர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாலிவுட்டை எந்த அளவுக்கு தங்கள் பக்கம் திருப்பினார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிலும் ஐஸ்வர்யாவின் ஆதிக்கம் இன்றளவும் கூட பாலிவுட்டில் அழுத்தமான முத்திரையாகவே இருக்கிறது.

இந்த நிலையில் இன்னொரு அழகிய கர்நாடக நடிகை பாலிவுட்டுக்குக் கிளம்பியுள்ளார். அவரது பெயர் நிதி சுப்பையா. ஓ மை காட் என்ற படத்தில் நிதி நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இவர் குறித்து அறிந்து பரவசப்பட்டுப் போன தூம் படப் புகழ் சஞ்சய் காத்வி தனது அடுத்த படத்திற்கு நிதியை புக் செய்து விட்டாராம்.

மும்பையில் முகாமிட்டு நடித்து வரும் நிதி, தனது பாலிவுட் வாழ்ககை படு ஜாலியாக இருப்பதாக கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், தொடர்ந்து நான்காவது மாதமாக மும்பையில் தங்கியிருக்கிறேன். மும்பையின் அதி வேக வாழ்க்கை என்னைக் கவர்ந்துள்ளது. சரியான திசையில் நானும் போய்க் கொண்டிருக்கிறேன் என்கிறார்.

தற்போது ஆஜ் கஸாப் லவ் என்ற படத்தில் அர்ஜூன் ராம்பாலுடன் இணைந்து நடித்து வரும் நிதி, அர்ஜூன் குறித்து புளகாங்கிதப்பட்டு பேசுகிறார். அவர் ரொம்ப ஹாட், அவரைப் பார்த்தாலே பேச்சு வர மாட்டேன் என்கிறது என்கிறார்.

இந்தியில் நடித்தாலும் கன்னடத்தில் நடிப்பதையும் கைவிடவில்லையாம் நிதி. அங்கு அவர் நடித்த அன்னா பாண்ட் படம் ஹிட்டாகியுள்ளதாம்.

அதேசமயம், இந்தியில் பெரிய ரவுண்டு வர ஆர்வமாக இருப்பதாக கூறும் நிதி, அதுவரை பிற மொழிப் படங்களில் நடிப்பதை ஒத்திவைக்க தீர்மானித்திருப்பதாகவும் கூறுகிறார்.

அப்படீன்னா, நிதி தமிழுக்கு வர கொஞ்சம் லேட்டாகும் போலிருக்கே...

Comments