'அடடா... இந்தப் பையன் நல்லாத்தானே இருந்தான்!'!!!

Wednesday,May,02,2012
அறிமுகமானது ஹீரோவாக இல்லை என்றாலும், அடுத்தடுத்த படங்களில் அசத்தலாக நடித்து வாகை சூடியவர் அந்த இளம் நடிகர்.

சமீப காலமாக இவரைப் பற்றித்தான் ஒரே கசமுச செய்தியாகக் கிசுகிசுக்கப்படுகிறது.

சமீபத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக இவர் நடித்துள்ள படத்தின் இசை வெளியீடு கலகலப்பாக போய்க் கொண்டிருந்தது.

அப்போது மேடையில் இளம் நடிகர் பேச வேண்டிய முறை. ஆனால் அவரோ பேசாமல் பம்மிக் கொண்டு, ஸ்டேஜுக்குப் பின்னால் போக, வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர், அவர் நிலைமை புரியாமல்.

வந்தவர், ஒரு பக்கமாக சிரித்தபடி, வணக்கம், நன்றி என்று கூறிவிட்டு ஓட, அப்போதுதான் மனிதர் உற்சாக பானத்தில் இருந்தது தெரியவந்தது.

மாலை 6 மணி கூட ஆகலியே, பகலிலே இந்த நிலவரமா என்று கலவரத்துடன் பேசிக் கொண்டனர் நடிகரின் நலம் விரும்பிகள். 'அடடா, இந்தப் பையன் நல்லாத்தானே இருந்தான்... எல்லாம் புதுசா கட்டுண கல்யாணந்தானப்பா காரணம்... குடும்ப சிக்கல் இந்த புதுமாப்பிள்ளையை குடிமகனாக்கிவிட்டுடுச்சி போல', என்று பேசிக் கொள்ள அது அப்படியே மீடியாவிலும் ஒரு சுற்று வர ஆரம்பித்துள்ளது!

Comments