ரகுமான் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு!!!

Saturday, ,May, ,26, 2012
சென்னை::இங்கிலாந்து, அமெரிக்கா என மாறி மாறி பறந்து கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். தற்போது கோடை விடுமுறைக்காக மனைவி, 3 குழந்தைகளுடன் அமெரிக்கா சென்றிருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: என் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விட்டிருப்பதால் அவர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் அழைத்து சென்றேன். அமெரிக்கா செல்லும் குழந்தைகள் எல்லோருமே டிஸ்னி வேர்ல்டுக்குத்தான் போக வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். ஆனால் எனது குழந்தைகள் அதற்கு பதிலாக தங்களை ஸ்டுயோக்களுக்கு அழைத்துச் செல்ல கேட்டனர். அவர்களை ஹாலிவுட் ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்றேன். அதை ஆர்வமாக சுற்றிப் பார்த்தனர். என் குழந்தைகளைப் பொறுத்தவரை என்னிடம் எப்போது விளையாட வேண்டும், எப்போது தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பதை கற்று வைத்திருக்கிறார்கள். வேலை நேரத்தில் என் எதிரில் கூட வரமாட்டார்கள். அந்த கட்டுப்பாட்டை அவர்களாக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். என் குடும்பத்துடன் நான் இருக்கும்போது ரசிகர்களும் எனது தனிமையில் தலையிடுவதில்லை. அந்த நேரங்களில் ஆட்டோகிராப், போட்டோ எடுத்துக்கொள்வது என்று கேட்டு தொந்தரவு செய்வதில்லை.

லாஸ் ஏஞ்சல்ஸில் என்னை பலருக்கு அடையாளம் தெரியாது. அதனால் எல்லா இடத்திலும் சுற்றுவேன். அப்படியும் மேற்கு ஆப்ரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் என்னை அடையாளம் கண்டுவிட்டனர். அவர்கள் சுமார் 12 பேர் இருந்தனர். அவர்களுடனான சந்திப்பும், கலந்துரையாடலும் மகிழ்ச்சி அளித்தது. இவ்வாறு ரகுமான் கூறினார்.

Comments