நடிகர் திலீப் மரணம்!!!

Friday, ,May, ,25, ,2012
நடிகர் திலீப் உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்.

தமிழ் திரையுலகில் 1980களில் முன்னணி நடிகராக இருந்தவர் திலீப். கமலுடன் வறுமையின் நிறம் சிவப்பு, தூங்காதே தம்பி தூங்காதே படங்களில் நடித்தார். ரஜினியுடன் வள்ளி படத்தில் நடித்தார். விசு இயக்கிய பெரும்பான்மை படங்களில் திலீப் இருந்தார்.

சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி, மாப்பிள்ளை படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த திலீப் பின்னர் குடும்பத்தோடு மைசூருக்கு குடிபெயர்ந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

சிறுநீரக கோளாறும் இருந்தது. உடனடியாக அவரை மைசூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தார்கள். நேற்று உடல்நிலை மோசமானது. திடீர் மாரடைப்பும் ஏற்பட்டது. டாக்டர்கள் திலீப் உயிரை காப்பாற்ற தீவிரமாக போராடியும் பலனின்றி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52.

திலீப்புக்கு ஹேமா என்ற மனைவியும், பவ்யா (20) என்ற மகளும், மவுரியா (16) என்ற மகனும் உள்ளனர். திலீப் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மைசூரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.

நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி சடங்கு மைசூரிலேயே நடக்கிறது.

கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் சொந்த ஊரான மைசூரில் இன்று அவர் காலமானார்.

Comments