விஜய் பட விவகாரம் சந்திரசேகரன் தலையீட்டால் இயக்குனருக்கு சிக்கல்!!!

Sunday, ,May, ,13, 2012
சென்னை::தயாரிப்பாளர் தலையீட்டால் புதுமுக இயக்குனருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த் நடிப¢பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய படம் ‘சட்டம் ஒரு இருட்டறை. இப்படத்தை சந்திரசேகரின் உறவினர் தயாரிக்க, அவரது மகள் சினேகா இயக்குவதாக இருந்தது. பின்னர் நடிகர் விஜய் தயாரிப்பார் என அறிவிக்கப்பட்டது. விக்ரம் பிரபு, பியா, ரீமா சென் நடிக்கின்றனர். ஷூட்டிங் தொடங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வந¢தபோது, இப்படத்தின் ஸ்கிரிப்ட்டில் மாற்றம் செய்ய வேண்டும் என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினாராம். இதனால் இயக்குனர் சினேகாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் மாற்றங்களை செய்தார்.

ஏற்கனவே தேர்வான நடிகர், நடிகைகளிடம் இப்படத்தின் கதை சொல்லப்பட்ட நிலையில் கதை, காட்சியில் திடீர் மாற்றம் செய்துள்ளது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள நட்சத்திரங்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சந்திரசேகரன் கூறும் மாற்றங்கள் ரீமேக் ஆகவுள்ள படத்துக்கு பிளஸ்ஸாக இருக்குமா அல்லது இப்போதுள்ள கதையை கெடுத்துவிடுமா என்ற சந்தேகம் பட குழுவினர் மத்தியில் எழுந்துளளது. கோலிவுட்டில் பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் களத்தில் குதித்திருக்கும் விக்ரம் பிரபுவுக்கும் ஸ்கிரிப்ட் மாற்றத்தால் பலன் இருக்கமா என்று முடிவு செய்ய முடியாமல் தவிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே படத்தின் முதல் ஷெட்யூல் சமீபத்தில் தொடங்கியது. ஷூட்டிங் ஸ்பாட்டில் தவறாமல் ஆஜராகும் சந்திரசேகரன், இந்த காட்சியை இது போல் படமாக்க வேண்டும் என உத்தரவிடுகிறாராம். இயக்குனரின் வேலையில் அவர் தலையீடுவதால் இயக்குனர் சினேகா வருத்தத்தில் இருக்கிறாராம்.

Comments