ஜூனியர் ஆட்டிஸ்டுகளை விபச்சாரத்தி்ல் தள்ளிய 'கோலங்கள்' துணை இயக்குனர் கைது!

Friday, ,May, ,25, 2012
சென்னை::கோலங்கள் மெகா சீரியலின் துணை இயக்குனர் அன்பு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடிக்கும் இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் வெள்ளித்திரை மற்றும் சின்னதிரையில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் வந்து போகும் இளம் பெண் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இந்த தொழில் ஈடுபடுபவர்களை தொடர்பு கொண்டனர். அவர்களும் போலீசாரை வடபழனி சரவணபவன் ஹோட்டல் அருகே வந்து பெண்ணை அழைத்துச் செல்லுமாறு தகவல் கொடுத்துள்ளனர்.

யூனிபார்மில் போனால் வேலைக்கு ஆகாது என்று நினைத்து மஃப்டியில் சென்ற போலீசார் குறிப்பிட்ட இடத்தை அடைந்தனர். அங்கு இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக அவரை அன்பு என்பவர் அங்கு அழைத்து வந்துள்ளார்.

போலீசார் அந்த இளம் பெண்ணை மீட்டு, அன்புவை கைது செய்தனர். அன்புவிடம் நடத்திய விசாரணையில் அவர் கோலங்கள் உள்ளிட்ட மெகா தொடர்களில் துணை இயக்குனராகவும், மேடை கச்சேரிகளில் நடன இயக்குனராகவும் பணியாற்றியது தெரிய வந்தது.

Comments