உதயநிதியை தொடர்ந்து விஜய்?!!!

Wednesday,May,16,2012
முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படம் முடிந்ததும் அடுத்ததாக விஜய் நடிக்கப்போகும் படம் எது? என்ற கேள்வி தான் தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் கேள்வியாக உள்ளது. இயக்குனர் கவுதம் மேனனின் யோஹான், மதராசப்பட்டினம் இயக்குனர் விஜய் என சில இயக்குனர்கள் விஜய்யை வைத்து படம் இயக்கபோவதாக அறிவித்துள்ளனர்.

இயக்குனர் விஜய் இதை பற்றி அறிவித்ததோடு சரி அதை பற்றி எவ்வித தகவலும் வெளியிடவில்லை. ஆனால் கவுதம் வாசுதேவ் மேனன் ‘யோஹான் ஜூலை மாதத்திலிருந்து தனது பயணத்தை துவங்குவான்’ எனக் கூறியிருக்கிறார். ஆனால் விஜய் தரப்பிலிருந்து இந்த அறிவிப்பிற்கு எவ்வித ரெஸ்பான்சும் வராததால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கோடம்பாக்கத்தில் பரப்பாக பேசப்படும் சங்கதி, விஜய் அடுத்ததாக நடிக்கவிருப்பது இயக்குனர் ராஜேஷ் படத்தில் தானாம். சமீபத்தில் ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’ஓ.கே ஓ.கே படம்’ கலெக்‌ஷனை அள்ளியது.

இயக்குனர் ராஜேஷும் விஜய்யும் இணைவதற்கு என்ன காரணம் என்றால் முழுநீள காமெடிப் படத்தில் நடிக்கவேண்டும் என விஜய் சமீபத்தில் கூறியது தானாம். அதற்காகத் தான் விஜய் ஜனவரி மாதம் முதல் தேதிகளை எந்த இயக்குனருக்கும் ஒதுக்கவில்லையாம்.

துப்பாக்கி படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்துவிட்டு கவுதம் வாசுதேவ் மேனன் படத்திலும் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பாரா என்ற மற்றொரு கேள்வியை முன் வைக்கிறது தமிழ் சினிமா?

Comments