எனது படங்களில் தாய் தலையீடு இல்லை: ராதா மகள் கார்த்திகா!!!

Monday, May, 14, 2012
நடிகை ராதா மகள் கார்த்திகா கதாநாயகியாக அறிமுகமாகி படங்களில் நடித்து வருகிறார். தமிழிலில் கார்த்திகா நடித்த 'கோ' படம் வெற்றிகரமாக ஓடியது. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறார். படப்பிடிப்பில் ராதா தலையீடு இருப்பதாக கிசுகிசு பரவியது.

சூட்டிங்கில் மகளுடன் ஆஜராகி கவர்ச்சியாக நடிக்க வைக்கக் கூடாது என்று இயக்குனர்களுக்கு கண்டிஷன் போடுவதாகவும் கூறப்பட்டது. ராதாவின் அறிவுரைப்படியே கார்த்திகா கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறார் என்றும் கூறினர்.

இது குறித்து கார்த்திகாவிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:-

எனது விஷயங்களிலும் நடிப்பிலும் என் தாய் ராதா தலையிடுவது இல்லை. படப்பிடிப்புக்கு சென்றதுமே நான் இயக்குனரின் குழந்தையாகி விடுகிறேன். அவர் சொல்கிறபடியே நடிக்கிறேன். எனது தாய் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். 150 படங்களில் நடித்துள்ளார். கடின உழைப்பால் முன்னுக்கு வந்தார். உச்சத்தில் இருக்கும்போதே குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார். என் தாய்க்கு திரையுலகில் இப்போதும் மரியாதை இருக்கிறது.

இவ்வாறு கார்த்திகா கூறினார்.

ராதாவும், கார்த்திகா பட விவகாரங்களில் தலையிடுவது இல்லை என்று மறுத்தார். அவர் கூறும்போது,

சினிமா முன்பு போல் இல்லை. நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. இளம் நடிகர், நடிகைகளுக்கு நடிப்பு பற்றிய எல்லா விஷயங்களும் தெரிகிறது. சொந்த முயற்சியில் முன்னேறுகிறார்கள். எனது மகள் கார்த்திகாவும் நிச்சயம் சாதிப்பார் என்றார்.

Comments