கோடையை கொண்டாடும் ஜெயா டிவியின் "சவால்"!!!

Wednesday,May,16,2012
கேம் ஷோ என்றாலே அது ஸ்டூடியோவுக்குள் மட்டும்தான் என்று இருந்த ட்ரெண்டை மாற்றி வெளியிடங்களிலும் வெற்றிகரமாக நடத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் பிருத்விராஜ். ஜெயா டிவியில் கடந்த 13 வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் "சவால்'' நிகழ்ச்சி பலதரப்பட்ட மக்களை கவர்ந்துள்ளது.

கோடையை கொண்டாடும் விதமாக மே மாதம் முழுவதும் இந்நிகழ்ச்சி `வி.ஜி.பி. யுனிவர்சல் கிங்டம்' அரங்கில் நடைபெற்று வருகிறது.

நடிகர் பிருத்விராஜ் கலக்கலாக தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, பல சவால்களை பலதரப்பட்டவர்களுக்கும் கொடுத்து வெற்றிவாகை சூடி வருகிறது. கோடை சிறப்பு நிகழ்ச்சியில் தமிழர்கள் மட்டுமின்றி அண்டை மாநில மக்களும் வெளிநாட்டினரும் சவாலை ஏற்க முன்வந்து வெற்றி பெற்றனர்.

சிறுவர் முதல் பெரிய வர் வரை அனைவரும் ஆர்வமாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை செய்தனர்.

இந்நிகழ்ச்சி வரும் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது.

Comments