'8 வருடங்களில் 40 வாட்டி...' - கோவையில் நமீதாவின் கொஞ்சல்!!!

Wednesday,May,02,2012
பட வாய்ப்புகள் இருக்கிறதோ இல்லையோ நடிகைகள் எப்போதும் பிஸியாகத்தான் இருக்கிறார்கள். கடை திறப்புகள், விளம்பர அழைப்புகள், நடன மேடைகள் என அவர்களுக்கான தேவைகள் இருந்து கொண்டே உள்ளன.

அப்படி ஒரு நிகழ்வுக்கு சமீபத்தில் நடிகை நமீதா வந்திருந்தார். இடம் கோவை, கணபதி.

நமீதாவைப் பார்த்ததும் உற்சாகமான ரசிகர்கள் பறக்கம் முத்தங்களை வீச, அவரும் அதை பக்குவமாகக் கையாண்டு, ரசிகர்களின் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். அதில் அவர் கில்லாடியாச்சே!

பின்னர் தன்னைப் பார்க்க ரசிகர்களுக்கு இணையாக முண்டியடித்த செய்தியாளர்களிடம் கொஞ்ச நேரம் பேசினார். அவர் கூறுகையில், "கோயமுத்தூர் எனக்கு ரொம்ப பிடிக்கும். சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் வரத் தயங்கியதில்லை. கடந்த 8 ஆண்டுகளில் 40 தடவை வந்து போயிருக்கிறேன் இந்த ஊருக்கு.

எனக்கு இந்த ஊரில் ரொம்ப பிடித்த இடம் கோவை ரேஸ்கோர்ஸ். ஒவ்வொரு முறை வரும் பொழுதும் உற்சாகமாக இருக்கும். எதிர்காலத்திலும் நான் தொடர்ந்து வர விரும்பும் இடம் இந்த கோவைதான்.

சினிமாவில் ஒரு இடத்தைப் பெற வேண்டிய நிலையில் நான் இல்லை. பாப்புலாரிட்டியைத் தாண்டி, நல்ல சினிமாவில், நல்ல வேடங்களில் நடித்தால் போதும் என்ற நிலை. அதனால்தான் திறமையை காட்டும் கதாபாத்திரங்களில் நடிக்க காத்திருக்கிறேன்.

இதுவரை நான் நடிச்சதில் பச்ச குதிரை என்னை ஒரு நல்ல திறமையான நடிகையாக காட்டியது. இன்னொரு படம் நடிகர் சரத்குமாருடன் இணைந்து நடித்த ஏய். காமெடி, ரொமான்ஸ் என எனக்கு நல்ல பேர்.

அஜீத்துடன் நடித்த பில்லா எனக்கு பெரிய திருப்பு முனை தந்தது. தற்போது கன்னட திரைப்படத்தில் நடித்து வருகிறேன். நடிப்பு

என்னுடன் நடித்த நடிகர்களில் யாரை பிடிக்கும் என்று தனித்து சொல்ல முடியாது. அனைத்து நடிகர்களுமே எனக்கு பிடிக்கும். வலது கண் பிடிக்குமா? இடது கண் பிடிக்குமோ? என்று கேட்டால் என்ன சொல்வது. அது போல் தான் என்னுடன் நடித்த நடிகர்கள் அனைவருமே சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர். யாரிடமும் எனக்கு கெட்ட பெயர் கிடையாது," என்றார்.

Comments