செ‌ன்னை ஏ‌ர்‌போ‌ர்‌ட்டி‌ல் நடிகை நய‌னிட‌ம் 40 நிமிடம் ‌விசாரணை!!!

Monday, May, 07, 2012
பா‌ங்கா‌க்‌கி‌ல் இரு‌ந்து செ‌ன்னை வ‌ந்த நடிகை நயன்தாராவிடம் சுங்க இலாகா அதிகாரிகள் 40 நிமிடங்கள் விசாரனை நடத்தியு‌ள்ள ‌நிக‌ழ்வு ‌சி‌னிமா உல‌கி‌ல் பரப‌ர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. ந‌ம் நா‌ட்டின‌ர் வெ‌ளிநா‌ட்டி‌ல்தா‌ன் ‌விசா‌ரி‌க்‌‌கி‌ப்படு‌கி‌ன்றன‌ர் எ‌ன்றா‌ல் நமது நா‌ட்டிலு‌ம் இதே ‌நிலையா எ‌ன்று வேதனையுட‌ன் செ‌ன்றா‌ர் நய‌ன்தாரா.

நடிக‌ர் பிரபு தேவாவை பிரிந்தபின் நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். இரண்டு புதிய தெலுங்கு படங்களிலும், அஜீத் ஜோடியாக ஒரு தமிழ் படத்திலும் அவர் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

அஜீத் பட வேலை தொடர்பாக கேரளாவில் இருந்து சென்னை வந்த நயன்தாரா தனது மானேஜர் ராஜேஷ், மேக்கப் மேன் ராஜு ஆகியோருடன் விமானம் மூலம் பாங்காக் சென்றார். வேலையை முடித்துக் கொண்டு பாங்காக்கில் இருந்து மீணடும் அவர் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் நய‌ன்தாரா இறங்கியபோது, பாங்காக் சென்று வந்தது தொடர்பாக சுங்க இலாகா கமிஷனர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவருடைய மானேஜர் ராஜேஷிடம் இன்னொரு அறையில் தனியாக விசாரணை நடந்தது. இரண்டு பேரின் சூட்கேஸ்களையும் அதிகாரிகள் சோதனை நட‌த்‌தின‌ர்.

40 நிமிடங்கள் நடந்த ‌விசாரணை, சோதனையா‌ல் நயன்தாரா தவித்துப் போனார். 40 நிமிடங்களுக்குப்பின் நயன்தாராவையும் அவருடைய மானேஜர் ராஜேஷையும் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

ந‌ம் நா‌ட்டின‌ர் வெ‌ளிநா‌ட்டி‌ல்தா‌ன் ‌விசா‌ரி‌க்‌‌கி‌ப்படு‌கி‌ன்றன‌ர் எ‌ன்றா‌ல் நமது நா‌ட்டிலு‌ம் இதே ‌நிலையா எ‌ன்று வேதனையுட‌ன் செ‌ன்றா‌ர் நய‌ன்தாரா.

யாரோ ஒரு நபர், சுங்க அதிகாரிகளுக்கு தவறான தகவல் அளித்த‌தி‌ன் பே‌ரி‌ல் அதிகாரிகள், விமான நிலையத்தில், நயன்தாராவிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்

Comments