150-வது ஜொள்ளு!!!150-வது ஜொள்ளு!!!

Thursday ,May, 03, 2012
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி படங்களில் நடிப்பதை விட்டு விலகி அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுவரை 149 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவி தனது 150-வது படமாக ‘ஆதிக்க நாயுடு’ என்ற படத்தை துவங்கினார். அந்த சமயத்தில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதால் நின்று போன படம் தொடங்கப்படவே இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரன்(இவரது பெயர் ராம்சரன் தேஜா. தேஜா என்பதை விடுத்து ராம்சரன் என்று மட்டும் அழைக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொண்டதால் ராம்சரன் என்று போடப்பட்டுள்ளது)

தமன்னாவுடன் இணைந்து நடித்த ‘ரச்சா’ படவிழாவில் கலந்துகொண்ட சிரஞ்சீவி மேடையில் பேசிய போது “ ஆஹா தமன்னாவை பார்த்ததும் என்னுடைய 150-வது படத்தை தொடங்கிவிடலாம் என்ற ஆசை வந்துவிட்டது.

என் பையன் கூட நடிச்ச பொண்ணு கூட நான் நடிக்க முடியாதே!” என ஜொள்ளினாராம் தெலுங்கு சூப்பர்ஸ்டார்.

Comments