சில்க் வேடத்தில் நடிக்க நிகிதா மறுப்பு!!!

Sunday, April, 22, 2012
சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க மறுத்து படத்திலிருந்து விலகினார் நிகிதா. கோலிவுட்டில் கலக்கிய சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து ‘தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் இந்தி படம் உருவானது. வித்யாபாலன் நடித்தார். அதேபோல் கன்னடத்திலும் சில்க் ஸ்மிதாவை மையமாக வைத்து படம் உருவாகிறது. இப்படத்துக்கும் டர்ட்டி பிக்சர் என்றே தலைப்பிட்டுள்ளனர். இதில் நடிக்க நிகிதா தேர்வானார். ஷூட்டிங்கிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நடிக்கிறார். இதற்காக இவருக்கு ரூ.85 லட்சம் சம்பளம் தரப்படுகிறது.

படத்திலிருந்து விலகியது பற்றி நிகிதா கூறும்போது, ‘Ôகிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் ஏழைப்பெண், வறுமையால் பாதை மாறிப்போகிறாள். பின்னர் சினிமா உலகிற்கு வருவதுபோல் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற கதையில் என்னால் நடிக்க முடியாது. பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டாலும் அப்படத்திலிருந்து விலகிவிட்டேன் என்றார். இது பற்றி டைரக்டர் திரிசூல் கூறும்போது, ‘இந்தி படத்தை பார்த்து காப்பி அடிக்கவில்லை. புதிதாக ஸ்கிரிப்ட் எழுதப்பட்டுள்ளது. ஒரு காட்சிகூட இந்தி படத்தில் இருந்தது போல் இருக்காது. இதற்கு யாரிடமும் உரிமை வாங்க தேவையில்லை என்றார்.

Comments