தமிழ் சினிமாவுக்கு மரியாதை உண்டு பட விழாவில் நடிகர் சூர்யா பேச்சு!!!

Monday, April 02, 2012
தமிழ் சினிமாவுக்கு எங்கே போனாலும் நல்ல மரியாதை உண்டு என்று பட விழாவில் நடிகர் சூர்யா கூறினார். பி.வி.பி சினிமா நிறுவனம் தயாரிக்கும் படம் நான் ஈ இந்த படத்தில் புதுமுகம் ஞானி நாயகக், சம்மந்தா நாயகி பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கி உள்ளார். படத்துக்கு மரகதமணி இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு பெரும் பகுதி முடிந்து விட்டது. இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் கலந்துக் கொண்டு இசை தட்டை வெளியிட்டு நடிகர் சூர்யா பேசியதாவது:- இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி சிறந்த இயக்குனர் தெலுங்கில் பல வெற்றி படங்கள் கொடுத்தவர். தற்போது சினிமா பல மாற்றங்களை ஏற்படுத்தி வித்தியாசமான முறையில் உருவாகி வருகிறது. அந்த வகையில் நான் ஈ படம் இருக்கும் தமிழ் சினிமாவுக்கு எங்கே போனாலும் நல்ல மரியாதை உண்டு. அதை தவறாமல் கொடுக்கிறார்கள். குறிப்பாக தெலுங்கு பக்கம் நம் சினிமா கலைஞர்கள், இயக்குனர்கள் நடிகர்களுக்கு நல்லமரியாதை கொடுக்கிறார்கள். அந்த வகையில் எங்களுக்கு எப்படி அங்கே சிம்மாசனம் கொடுக்கிறீர்களோ அதே போல் உங்களுக்கு இங்கே சிம்மாசனம் உண்டு. அதை திரை உலகமும் தமிழ் ரசிகர்கள் கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் இயக்குனர்கள் பாலா, லிங்குசாமி, சமுத்திரக்கனி, பாலசேகரன், நடிகர் கார்த்தி, படத்தின் நாயதி சமந்தா பட யூனிட்டை சேர்ந்தவர்கள் என பலர் கலந்துக் கொணடனர். இதை தட்டு மற்றும் ட்ரைலரை சூர்யா, பாலா, கார்த்தி சமுத்திரகனி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

Comments