தோனிக்காக ஸ்பெஷல் விமானத்தில் சென்னை வந்த லட்சுமி ராய்!!!

Monday, April, 09, 2012
சென்னை::ஐபிஎல் துவக்கவிழாவுக்கு வேறு யார் வந்ததை விடவும், லட்சுமிராயின் வருகைதான் ரொம்ப விசேஷமாக பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வந்த லட்சுமிராய், மாலையில் நடந்த துவக்க விழா நிகழ்வுகளில் அனைவரது கவனைத்தையும் ஈர்க்கும் அளவு அசத்தல் உடையில் வந்திருந்தார்.

நிகழ்ச்சியில் வேறு யாருக்கும் கிடைக்காத தனி மரியாதை லட்சுமி ராய்க்கு. நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் தங்கியது தாஞ் கோரமண்டல் ஹோட்டலில். இங்குதான் தோனி உள்ளிட்ட வீரர்கள் தங்கியிருந்தனர். லட்சுமிராய்க்கு 'பிரசிடென்சியல் சூட்' ஒதுக்கியிருந்தனர். பொதுவாக நடிகைகள் இந்த அளவு ஆடம்பர சூட்டில் தங்குவதில்லை.

இதன் பின்னணி என்னவென்பது ஊரறிந்த ரகசியம் என்பதால், இதுகுறித்த வதந்திகள் எதற்கும் பதில் சொல்லும் மூடில் கூட இல்லையாம் லட்சுமிராய்.

இதுகுறித்து அவரிடம் கேட்டால், "நான் ரொம்ப சிம்பிளான பெண். இதுதான் என் லைப்ஸ்டல். எனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்கிறேன். சில விஷயங்கள் ரொம்ப பர்சனலானவை. அதுகுறித்து வரும் செய்திகளுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை," என்றார் மையமாக!

அவரவருக்குப் பிடித்த அர்த்தத்தை எடுத்துக் கொள்ளலாம்!

Comments