பிரபுதேவா , த்ரிஷா திடீர் நெருக்கம்!!!

Saturday, April, 07, 2012
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பிரபுதேவாவை கட்டியணைத்து த்ரிஷா வாழ்த்து சொன்னார். கடந்த 3 வருடமாக காதலித்து வந்த பிரபுதேவா, நயன்தாரா திடீரென்று பிரிந்தனர். இதையடுத்து நடிக்காமல் ஒதுங்கி இருந்த நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த 3,ம் தேதி பிரபுதேவாவுக்கு பிறந்த நாள். அன்று நெருங்கிய நண்பர்களுக்கு சென்னையில் உள்ள தனது பங்களாவில் விருந்து கொடுத்தார். நெருக்கமான நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த விருந்தில் நடிகை த்ரிஷாவும் நேரில் வந்து இன்ப அதிர்ச்சி தந்தார். அவரை கைகுலுக்கி வரவேற்றார் பிரபுதேவா. இருவரும் கட்டிப்பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

இது அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர் அங்கிருந்து விடைபெற்றார் த்ரிஷா. பிரபுதேவாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் த்ரிஷா. இதுபற்றி அவர் கூறும்போது, ‘தெலுங்கில் எனக்கு பெரிய வரவேற்பை பெற்றுத்தந்த ‘நு ஒஸ்தானன்டே நே ஒத்தன்டானா’ என்ற படத்தை பிரபுதேவா அளித்தார். அவருக்கு என்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். பிறந்தநாள் விருந்துக்கு நயன்தாராவை அழைக்கவில்லையாம் பிரபுதேவா.

Comments