ஹீரோக்களை கட்டிப்பிடித்து நடிப்பது போர் : ரீமா தடாலடி!!!

Saturday, April, 14, 2012
ஹீரோக்களை கட்டிப்பிடித்து நடிப்பது போர் அடித்துவிட்டது. இனி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன் என்கிறார் ரீமா கல்லிங்கல். யுவன் யுவதி படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். காதல், ஆக்ஷன் கதை கொண்ட படங்களில் நடித்து வந்த இவர், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார். ‘இந்தியன் ரூபி என்ற படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்தார். அடுத்து ‘நித்ரா என்ற படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவரின் மனைவியாக நடித்தார். இதையடுத்து ‘22 பிமேல் கோட்டயம் என்ற படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறாராம். இது பற்றி அவர் கூறும்போது, ‘ஹீரோக்களை கட்டிப்பிடித்து டூயட் பாடுவது போர் அடித்துவிட்டது. 22... படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறேன். என்னை சுற்றியே கதை நகர்கிறது. இதை பெரிய பொறுப்பாக உணர்கிறேன். எல்லோருடைய எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில் எனது நடிப்பை சிறப்பாக வழங்குவேன் என்றார்.

Comments