ஹீரோயின் தேர்வில் தலையிட மாட்டேன் : தனுஷ் பேட்டி!!!

Saturday, April, 07, 2012
ஹீரோயின் தேர்வு விஷயத்தில் தலையிட மாட்டேன் என்றார் தனுஷ். இது பற்றி தனுஷ் கூறியதாவது: என்னையும் ஸ்ருதிஹாசனையும் இணைத்து இன்னும் கிசுகிசு எழுதுகிறார்கள். அதற்கு எப்போதோ பதில் சொல்லிவிட்டேன். அதுபற்றி மறுபடியும் பேசுவது நேரத்தை வீணடிப்பதாகும். அதற்கு பதிலாக அடுத்து நடிக்க உள்ள படங்களைப் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்கும். இப்போது அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன். அடுத்து பரத்பாலா இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இந்த பட வாய்ப்பு அமைந்தது எதிர்பாராமல் நடந்தது. தேசிய விருது வாங்குவதற்காக டெல்லி சென்றேன். அங்குதான் பரத்பாலாவை சந்தித்தேன். இருவரும் முதலில் சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டிருந்தோம்.

இருவரும் இணைந்து பணியாற்றலாம் என முடிவு செய்தோம். பின்னர் Ô3Õ பட ஆடியோ மிக்ஸிங்கிற்காக மும்பை சென்றேன். அப்போது மறுபடியும் இருவரும் சந்தித்தோம். என்னிடம் ஒரு வரி கதை சொன்னார். பிடித்திருந்தது. அதை முழு ஸ்கிரிப்டாக எழுதும்படி கூறினேன். இப்படித்தான் இருவரும் இப்படத்தில் இணைந்தோம். இப்படத்தில் ‘பூÕ பட ஹீரோயின் பார்வதி நடிக்கிறாரா? என்கிறார்கள். இது எனக்கே ஒரு தகவல் தான். கேரக்டர் தவிர வேறு எந்த விஷயத்திலும் நான் தலையிடுவது கிடையாது. எந்த நடிகை பொருத்தமாக இருப்பார் என்பதை ஸ்கிரிப்ட் அடிப்படையில் இயக்குனர்தான் முடிவு செய்வார். இப்படத்தின் ஷூட்டிங் நமீபியாவில் இம்மாத
இறுதியில் நடக்க உள்ளது.

Comments