படப்பிடிப்பில் ப்ரியங்காவுடன் மோதலா? - மறுக்கும் இலியானா!!!

Wednesday,April,25,2012
இந்திப் படத்தில் நடிக்கும்போது படப்பிடிப்பில் தனக்கும் பிரியங்கா சோப்ராவுக்கும் இடையே மோதல் என்ற வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறார் நடிகை இலியானா.

தமிழில் நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகை.

பார்ஃபி எனும் இந்திப் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் முதல் நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இருவருக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இருவரும் தனக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இயக்குனரை வற்புறுத்தினார்களாம். ஒரு கட்டத்தில் இருவரும் நேரடியாக ஒருவரையொருவர் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும் படப்பிடிப்பு குழுவினர் சமரசப்படுத்தியதாகவும் வதந்தி பரவிது.

இது குறித்து இலியானாவிடம் கேட்டபோது, "பிரியங்கா சோப்ராவும் நானும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறோம். பிரியங்கா சோப்ராவை எனது தோழி என்று சொல்ல மாட்டேன். ஒரு நடிகை என்ற ரீதியிலேயே எங்களுக்குள் அறிமுகம் உள்ளது. வேறு எந்த தொடர்பும் இல்லை. எங்களுக்குள் மோதல் நடந்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ப்ரியங்கா சிறந்த நடிகை," என்றார்.

Comments