எனக்கென்று தனி இடம் இல்லை - தமன்னா!!!

Monday, April, 30, 2012
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ”ஏனென்றால் காதல் என்பேன்” படம் மூலம் ரீஎண்ட்ரி ஆகும் தமன்னா கூறியதாவது:

தமிழ்ப் படங்களில் நடித்து ஒன்றரை வருடம் ஆகிறது. நான் தெலுங்கில் நடித்த “ரச்சா” படம் வெற்றியடைந்ததை அடுத்து, தமிழில் “ரகளை” என்ற பெயரில் ரிலீஸ் செய்தனர். தற்போது தெலுங்கில் பிசியாக இருக்கிறேன். அதனால் தமிழ் சினிமாவிலிருந்து விலகி விட்ட்தாக கூறுகிறார்கள். நல்ல கதை, நல்ல கேரக்டர் அமையும்போது நிச்சயம் நடிப்பேன்.

ஒரே மாதிரியாக நடித்ததால்தான் தமிழில் வாய்ப்பு குறைந்ததாக சொல்வதை ஒப்புக்கொள்ள மாட்டேன். ஸ்கிரிப்ட்தான் ஹீரோயினை தீர்மானிக்கிறது. தமிழில் இப்போது நிறைய ஹீரோயின்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் என் இடத்தை பிடித்து விட்டார்கள் என்பதை ஏற்கமாட்டேன். காரணம் எனக்கென்று எந்த தனி இடமும் கிடையாது. நான் நடிகை, எனக்கு பிடித்த, என்னால் முடிகிற கேரக்டர்களில் நடிக்கிறேன். அது எந்த மொழியாக இருந்தாலும் சரி.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments