ஐட்டம் நடிகைகளுக்கே ஷாக் கொடுத்த அஞ்சலி- ஓவியாவின் கிளுகிளு கவர்ச்சி!!!

Sunday, April, 22, 2012
அட நாம் பார்ப்பது நிஜம்தானா... என்று நம்ப முடியாமல் பார்க்க வேண்டியிருந்தது, கலகலப்பு படத்தின் கவர்ச்சி வழியும் அந்த பாடல் காட்சியை.

இதுவரை குடும்ப குத்து விளக்காகத் திகழ்ந்த அஞ்சலியும் ஓவியாவும் ஒரு கவர்ச்சிக் கண்காட்சியே நடத்தியிருந்தனர்.

சுந்தர் சி. இயக்கியுள்ள இந்தப் படத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஒவியா, சந்தானம் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில்தான் அந்த அம்சமான பாடலைக் காணும் 'பாக்கியம்' கிடைத்தது செய்தியாளர்களுக்கு. பாடலில் குத்துங்க எஜமான் குத்துங்க என்றெல்லாம் வரிகளை எழுதி கதிகலங்க வைத்திருந்தனர்.

விழாவில் அஞ்சலியிடம் இந்தக் கவர்ச்சிப் புரட்சி பற்றிக் கேட்டபோது, "ஏதோ நான்தான் கவர்ச்சியா நடிச்ச மாதிரி கேட்காதீங்க. மீனா காலத்தில் இருந்தே கவர்ச்சி இருக்கிறது. அழகாக காட்டுவதுதான் கவர்ச்சி. எனக்கு படத்தில் நல்ல ரோல்.. ஒரு பாடல் காட்சியில் அது போல் நடிக்க வேண்டிய இருந்ததால் நடித்தேன். அது தவறல்ல. இது வித்தியாசமான கல கலப்பான படம். நான் கலர்புல் நாயகியாக வருகிறேன்," என்றார்.

ஓவியாவிடம் உங்களுக்கும் விமலுக்கு செம கெமிஸ்ட்ரி என்கிறார்களே, என்றால், "அதெல்லாம் ஒண்ணுமில்ல. இந்தப் படத்துல விமல் இருந்தாலும் அவருக்கு நான் ஜோடி இல்லையே. எனக்கும் சிவாவுக்கும்தான் கெமிஸ்டரி," என்றார்.

சிவாவோ, "இல்லையில்லை... அஞ்சலிக்கும் ஒவியாவுக்கும்தான் கெமிஸ்ட்ரி... அவங்கதான் ரகசியமா அடிக்கடி பேசிக்கிட்டே இருந்தாங்க," என்று கலாய்த்தார்.

இயக்குனர் சுந்தர் சி. கூறும்போது, "ஒரு பாடல் காட்சியில் ரொம்ப கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று அஞ்சலியிடமும், ஓவியாவிடமும் கேட்டேன். அவர்கள் சம்மதித்தனர். அதற்கான உடைகளை கூட அவர்களே தயார் செய்தார்கள். ஒவ்வொருத்தரும் கதையை உருவாக்கும் போது கேரக்டர்களுக்கு அந்தந்த நடிகர்களை கற்பனை செய்து வைத்திருப்பார்கள்.

இந்த படத்துக்கு நான் யாரெல்லாம் நடிக்க வேண்டும் என்று கதையை உருவாக்கிய போது நினைத்தேனோ அவர்களெல்லாம் கிடைத்தனர். சிறு கேரக்டரில் நடித்தவர்கள் கூட சிறப்பாக நடித்துள்ளனர்," என்றார்.

நடிகர்கள் விமல், சிவா, நடிகை ஓவியா, இசையமைப்பாளர் விஜய் எபிநேசர், ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார், யுடிவி தனஞ்செயன் உள்பட பலரும் பங்கேற்றனர்.

Comments