நல்ல படங்களையே பார்க்கின்றனர்: தமிழ் ரசிகர்களுக்கு திரிஷா பாராட்டு!!!

Friday, April, 13, 2012
திரிஷா தமிழில் விஷால் ஜோடியாக 'சமரன்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நடித்த 'தம்மு' படம் ரிலீசுக்கு தயாராகிறது. 'என்றென்றும் புன்னகை' என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-

சென்னை எனக்கு பிடித்த இடம். இதை எனது தாய் வீடு மாதிரி பார்க்கிறேன். இங்கு நான் விரும்பாத இடமே கிடையாது. கிழக்கு கடற்கரை சாலை எனக்கு ரொம்ப பிடித்தமான இடம். அதில் பயணப்படும் போது சொர்க்கத்தில் இருப்பதுபோல் தோன்றும். அங்குதான் எனக்கு பிடித்தமான ரிசார்ட்கள் உள்ளன. அடிக்கடி அந்த சாலையில் பயணிக்கிறேன்.

நான் வளரும்போது தமிழ் சினிமாவை அதிகம் தெரியாது. மாடலிங்கில் ஈடுபட்ட பிறகுதான் திரையுலகுக்கு நெருக்கமானேன். திரையுலகுக்கு வருவதற்கு முன்னால் சினிமாவில் எனக்கு தெரிந்த மூன்று பேர் ரஜினி, கமல், மணிரத்னம். அவர்களின் படங்களை பார்க்க அனுமதிப்பார்கள். முதல் நாள் ரஜினி படங்களை பார்த்த அனுபவங்கள் மறக்க முடியாது. இப்போது நடிகையாகி விட்டதால் பிரிமியர் ஷோவில் ரஜினி படங்களை பார்க்க முடியாது. இப்போதும் ரசிகர்களுக்கு இருக்கும் உணர்வுகளுடனேயே அவரது படங்களை பார்க்கிறேன்.

ரஜினியை அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா என உலகம் முழுவதும் தெரியும். அவர் இங்கு வசிப்பதால் சென்னையையும் வெளிநாட்டினர் தெரிந்து வைத்துள்ளனர். இந்தியா பற்றி அவ்வளவாக தெரியாத பலர் ரஜினியை நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். தமிழ் ரசிகர்கள் நல்ல படங்களை மட்டுமே பார்க்கின்றனர். புதுமுக நடிகர்களையும் ஊக்கப்படுத்துகின்றனர். தெலுங்கு ரசிகர்களைபோல் நடிகர்கள் பின்னால் அலைவது இல்லை கதாநாயகர்களின் புகழ்பாடுவதும் இல்லை.

இவ்வாறு திரிஷா கூறினார்.

Comments