ஹீரோவுடன் கிளுகிளுப்பான காட்சி : படத்திலிருந்து வெளியேறினார் பாவனா!!!

Monday, April, 23, 2012
ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்க மறுத்து படத்திலிருந்து வெளியேறினார் பாவனா. ‘ஜெயம் கொண்டான்Õ, ‘சித்திரம் பேசுதடிÕ, ‘தீபாவளிÕ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாவனா. தற்போது தமிழ் படங்கள் கைவசம் இல்லை. மலையாளம், கன்னடத்தில் நடிக்கிறார். இந்தியில் இம்ரான் ஹாஷ்மியுடன் ஜோடியாக நடிக்க பாவனா ஒப்பந்தம் ஆனார். முத்த ஸ்பெஷலிஸ்ட் என்று பாலிவுட்டில் பட்டப்பெயர் பெற்றவர் இம்ரான். சக ஹீரோயினுக்கு தவறாமல் லிப் டு லிப் முத்தம் கொடுப்பதுடன், நெருக்கமாக நடித்து அசத்துவார். பாவனாவையும் இம்ரானுடன் அதுபோல் நெருக்கமாக நடிக்க சொன்னபோது அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் பல காட்சிகளில் அரைகுறை ஆடையுடன் நடிக்க வேண்டும் என இயக்குனர் கூறியிருக்கிறார்.

அப்படி நடிக்க முடியாது என்று கூறி படத்திலிருந்து விலகியுள்ளார் பாவனா. இது பற்றி பாவனா கூறும்போது, ‘Ôஇந்தி படத்தில் நடிக்க நான் தயங்கவில்லை. இம்ரானுடன் நடிக்கும் படத்திலிருந்து விலகியதற்கு காரணம் இருக்கிறது. அவருடன் மிக நெருக்கமாக நடிக்க கேட்டதுடன், படுகவர்ச்சியாகவும் நடிக்க சொன்னார்கள். இது இம்ரான் படத்துக்கே உரித்தான முத்திரை. என் நிலை எனக்கு தெரியும். எப்படி நடிக்க வேண்டும் என்பதும் தெரியும். கவர்ச்சியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமாக வேண்டிய அவசியம் இல்லை. உணர்வுபூர்வமான கதாபாத்திரம் மூலமே அறிமுகமாக விரும்புகிறேன்ÕÕ என்றார்.

Comments