எனது படங்கள் ஓடாததற்கு ஹீரோக்கள்தான் காரணம்!!!

Monday, April, 23, 2012
இந்தியில் நான் இயக்கிய படங்கள் தோல்வி அடைந்ததற்கு ஹீரோக்கள்தான் காரணம் என்றார் கவுதம் மேனன்.
தமிழில் கவுதம் மேனன் இயக்கிய படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா. சிம்பு, த்ரிஷா நடித்திருந்தனர். இப்படத்தை ‘ஏக் தீவானா தா என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தார் கவுதம் மேனன். பாலிவுட் ஹீரோ பிரதீக், மதராசபட்டினம் எமி ஜாக்சன் நடித்திருந்தனர். சமீபத்தில் ரிலீஸ் ஆன இப்படம் தோல்வி அடைந்தது. 10 வருடத்துக்கு முன்பு ‘மின்னலே படத்தை இயக்கினார். அப்படமும் இந்தியில் ரீமேக் செய்தபோது தோல்வி அடைந்தது. இது குறித்து கவுதம் மேனன் கூறியதாவது:

இந்தியில் நான் இயக்கிய படங்கள் தோல்வி அடைந்ததை ஏற்கிறேன். அதற்கு காரணம் கதை அல்ல. மின்னலேÕ படத்தில் மாதவன் நடித்தார். அவர் ஓவர் வெயிட் போட்டிருந்ததால் எடுபடவில்லை. அடுத்து ‘ஏக் தீவானா தா (விண்ணை தாண்டி வருவாயா) படத்துக்கு நான் செலக்ட் செய்த ஹீரோ பிரதீக் பொருத்தமானவராக அமையவில்லை. ஏற்கனவே 4 தோல்வி படங்களை அவர் தந்திருந்தார். ஹீரோவுக்கான இமேஜ் இல்லாமல் வில்லன் இமேஜ் கொண்டவர். பட ரிலீஸின்போது ஓபனிங் கூட இல்லை. இதே படத்தில் ரன்பிர் கபூர் ஹீரோவாக நடித்திருந்தால் படம் வெற்றி அடைந்திருக்கும்.

Comments