நானாக வாய்ப்பு கேட்டு யாரிடமும் கெஞ்ச முடியாது : பிரியாமணி கோபம்!!!

Wednesday,April,18, 2012
தமிழில் வாய்ப்பு இல்லாததற்கு நானாக வாய்ப்பு கேட்டு யாரிடமும் கெஞ்ச முடியாது என்றார் பிரியாமணி. இது பற்றி அவர் கூறியதாவது: கன்னடத்தில் இரட்டை சகோதரிகளாக சாருலதா படத்தில் டபுள் ரோலில் நடிக்கிறேன். இதற்கு முன் இருவேடத்தில் நடித்ததில்லை. ஒருத்தி ஜாலியாக ஊர் சுற்றுபவள். இன்னொருத்தி அப்பாவி என இரு வேறுபட்ட குணம் கொண்டவர்கள். ஒரே செட்டில் ஷூட்டிங் நடக்கும். அப்போது அடுத்தடுத்து அதே இடத்தில் காட்சி படமாக்குவார்கள். ஒரு காட்சி முடித்து உடனே காஸ்டியூம் மாற்றிக்கொண்டு வேறு பாடிலாங்குவேஜுடன் நடிக்க வேண்டும். இது கடினமாக இருந்தது. இது எந்த படத்தையும் பார்த்து காப்பியடிக்கவில்லை.

மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்துள்ள படம் வெளிவர உள்ளது. அடுத்து பாலிவுட்டில் நடிக்க உள்ளேன். அங்கு 2 இந்தி படத்துக்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன். இதில் ரிதேஷ் தேஷ்முக¢குடன் காமெடி கலந்த கதையில் நடிக்கிறேன். கோலிவுட், டோலிவுட்டில் புதிய படங்கள் எதுவும் நடிக்கவில்லை. கடந்த ஆண்டில் தமிழில் நடித்திருக்கிறேன். அதன்பிறகு நல்ல கதை வரவில்லை. உங்களுக்கு பட வாய்ப்புகள் குறைந்ததற்கு யார் காரணம் என்கிறார்கள். அதுபற்றி எதுவும் கூற முடியாது. மேலும் நானாகவே வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளர்களை போய் சந்திக்க முடியாது. யாரிடமும் வாய்ப்புக்காக கெஞ்சவும் முடியாது. யாராவது என்னை ஒப்பந்தம் செய்ய வந்தால், அதற்கு முன் என்னால் எந்த கேரக்டர் செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

Comments