மோகன்லாலின் விஸ்மாயா ஸ்டுடியோவில் ரஜினி & டீம்!!!

Saturday, April, 21, 2012
கோச்சடையான் டீம் இப்போது சித்ராஞ்சலி ஸ்டுடியோவிலிருந்து மோகன் லாலின் விஸ்மாயா ஸ்டுடியோவுக்கு இடம்பெயர்ந்துள்ளது.

இங்குதான் கோச்சடையான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கவிருப்பதாக தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் அரசுக்கு சொந்தமான சித்ராஞ்சலி ஸ்டுடியோவில் ஷூட்டிங்கை முடித்துக் கொண்ட சௌந்தர்யா, அடுத்து நடிகர் மோகன்லாலுக்குச் சொந்தமான விஸ்மாயா மேக்ஸ் அனிமேஷன் ஸ்டுடியோவில்தான் முக்கியமான வேலைகளை மேற்கொள்ளவிருக்கிறார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறுகையில், "கோச்சடையான் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விஸ்மாயா மேக்ஸில் நடக்க உள்ளது. உலகத் தரமான அனிமேஷன் தொழில்நுட்ப வசதிகள் இந்த ஸ்டுடியோவில் உள்ளன. படத்தின் முழுப் பணிகளையும் முடிக்கும் அளவுக்கு இங்கு வசதிகள் உள்ளன," என்று கூறியுள்ளார்.

ரஜினி - தீபிகா படுகோன் இருவருமே இப்போது திருவனந்தபுரத்தில் உள்ளனர். ஷூட்டிங் முடிந்ததும் நேராக நவீன கேரவனுக்குச் சென்றுவிடுகிறார் சூப்பர் ஸ்டார். பொதுவாக கேரவனை பயன்படுத்தாத அவர், இந்த முறை க்ளைமேட் மற்றும் மீடியா பரபரப்பை கருத்தில் கொண்டு பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

படத்தின் காட்சிகளை யாராவது சுட்டு இணையத்தில் வெளியிட்டுவிடப் போகிறார்கள் என்ற முன்யோசனையுடன், இந்த ஸ்டுடியோவில் உள்ள யாரும் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வார இறுதியில் படப்பிடிப்புப் பணிகள் முடிந்துவிடும் என்கிறார்கள். அடுத்து முழுக்க முழுக்க போஸ்ட் புரொடக்ஷன் வேலைதான்.

Comments