சல்மான்கானை மீண்டும் இயக்குவேன் - பிரபுதேவா!!!

Wednesday,April,18, 2012
ஐபிஎல் தொடக்க விழாவில் ஆர்ப்பாட்டமாக பிரபுதேவா மைடயில் ஆட, பேக்ஸ்டே‌ஜில் புதிய படத்துக்கான வாய்மொழி ஒப்பந்தம் சத்தமில்லாமல் அரங்கேறியது.

இந்த விழாவுக்கு தனது குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார் பிரபுதேவா. சல்மான்கானின் ரசிகர்களான அவர்களுக்கு அவரை சந்தித்ததில் அளவற்ற மகிழ்ச்சி. அத்துடன் அடுத்தப் படம் குறித்தும் பேசியிருக்கிறார்கள். சல்மான்கானின் அடுத்தடுத்த மாஸ் ஹிட்களுக்கு அடித்தளம் இட்ட படம் பிரபுதேவா இயக்கிய வான்டட். தற்போது அக்சய்குமார் நடிக்கும் ரவுடி ரத்தோர் படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா.

ஐபிஎல் விழாவில் சந்தித்துக் கொண்ட போது மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து இருவரும் பேசியிருக்கிறார்கள். இதுபற்றி பேட்டியளித்த பிரபுதேவா, சல்மான்கானுடன் இணைந்து மீண்டும் கண்டிப்பாக படம் செய்வேன். ஆனால் அடுத்தப் படமாக அது இருக்காது. ச‌ரியான ஸ்கி‌ரிப்ட் அமைந்ததும் மீண்டும் இணைவோம் என்று தெ‌ரிவித்திருக்கிறார்.

Comments