ஆமா... கல்யாணந்தான்... ஆனாலும் நடிப்பேன்! - ஸ்ரேயா!!!

Monday, April, 30, 2012
விரைவில் தனக்கு திருமணம் நடக்கப் போவதாக வந்த செய்திகள் உண்மைதான் என்றும், ஆனாலும் திருமணத்துக்குப் பிறகு நடிப்பு தொடரும் என்றும் நடிகை ஸ்ரேயா கூறினார்.

தென்னகத்தில் பிரபல நடிகையாகத் திகழ்ந்து, பின்னர் பாலிவுட்டிலும் நடித்தவர் ஸ்ரேயா. இப்போது இரண்டு மூன்று படங்களில் நடித்தாலும், அந்த அளவு பிஸியாக இல்லை. எனவே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பமாகிவிட்டது.

இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டபோது, "திருமண ஏற்பாடுகள் நடப்பது உண்மைதான். பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். அதது அந்தந்த வயதில் நடக்க வேண்டும். பெற்றோருக்கும் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே நானும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டேன்.

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொள்வேன். திருமணத்துக்கு நான் சம்மதித்து விட்டதால் ஸ்ரேயாவுக்கு சினிமா வாய்ப்பு போய்விட்டது. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்திகள் பரவக்கூடும். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன். சினிமாவுக்கும், திருமணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து இதனை புரிந்து கொள்ளவேண்டும். மனதுக்கு பிடித்தவர் கிடைத்தால் காதலிக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அப்படி யாரையும் இதுவரை நான் சந்திக்கவில்லை. எனவேதான் பெற்றோர் பார்க்கிறார்கள்.

எனக்கு கணவராக வருபவர் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம். சினிமா உலகை நன்கு புரிந்த, தெளிவானவராக இருக்க வேண்டும். எனக்கு நல்ல நண்பராக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் என்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

திருமணத்துக்கு பிறகு நிறைய பேர் விவாகரத்து செய்து பிரிகிறார்கள். அப்படி விவாகரத்து செய்வது எனக்கு பிடிக்காது. அதனால் முதலிலேயே தீர ஆராய்ந்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்," என்றார்.

Comments