இலங்கை போரில் புதைத்த கண்ணிவெடி வ¤பரீதத்தை கூறும் மிதிவெடி!!!

Saturday, April, 07, 2012
கண்ணி வெடி பயங்கரத்தை மையமாக வைத்து மிதிவெடி படம் உருவாகிறது. இது பற்றி ‘மிதிவெடி பட இயக்குனர் ஆனந்த் மயூர் சீனிவாஸ் கூறியது: இலங்கை போரின்போது குழந்தையுடன் தப்பி வரும் பெண், சிங்கள ராணுவ அதிகாரியிடம் சிக்கிக் கொள்கிறார். அவளிடம் முக்கிய ஆதாரம் ஒன்றை கைப்பற்றுவதற்காக அதிகாரி மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலிருந்து அவள் தப்பிக்கிறாளா என்பதே கதை. ‘வேட்டையாடு விளையாடுÕ படத்தில் நடித்த டேனியல் பாலாஜி ராணுவ அதிகாரியாகவும், தப்பி வரும் பெண்ணாக நீலிமாவும் நடிக்கின்றனர். கருப்பையா ஒளிப்பதிவு. அருணகிரி இசை.

உலக அளவில் துப்பாக்கி, குண்டுகளைவிட மிக பயங்கர ஆயுதமாக கருதப்படுவது கண்ணி வெடிகள்தான். 2ம் உலக போரின்போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை ஜெர்மனியில் இன்றும் தேடி அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். வியட்னாம் போரின்போதும், கம்போடியா போரின்போதும் புதைக்கப்பட்ட கண்ணிவெடி களையும் அகற்றும் பணி நடக்கிறது. அதுபோல்தான் இலங்கையிலும் போர் நடந்தபோது இருதரப்பினரும் புதைத்தவற்றில் இன்னும் 10 லட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் புதைந்து கிடக்கிறது. கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அகற்றுவதற்காக ஓர் அமைப்பு செயல்படுகிறது. ஆனால் இவற்றுக்கான நிதி மற்றும் ஆட்கள் மிக குறைந்த அளவே கிடைக்கிறது. இதையெல்லாம் விளக்கும் விழிப்புணர்வு கதையாக இப்படம் உருவாகி உள்ளது.

Comments