குதிரை பந்தயம் பார்க்க குழந்தையுடன் ஐஸ்வர்யா துபாய்க்கு பயணம்!!!

Tuesday, April, 03, 2012
உலகக் கோப்பை குதிரை பந்தயத்தை பார்க்க முதன் முதலாக மகளுடன் ஐஸ்வர்யா துபாய் புறப்பட்டு சென்றார். நடிகர் அபிஷேக் - நடிகை ஐஸ்வர்யா தம்பதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி மும்பை செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தற்காலிகமாக பேட்டி-பி என குழந்தையை அழைத்தனர். இப்போது குழந்தைக்கு ஆரத்யா என பெயர் சூட்டப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், குழந்தையுடன் ஐஸ்வர்யா துபாய் சென்றார். அங்கு உலக கோப்பைக்கான குதிரை பந்தய போட்டி நடக்கிறது. அதை பார்க்க ஐஸ்வர்யா ஏற்பாடுகள் செய்திருந்தார்.

மேலும், ஒரு மாதத்துக்கு முன்பே ஆரத்யாவுக்கு பாஸ்போர்ட்டும் வாங்கப்பட்டது. துபாய்க்கு ஐஸ்வர்யாவுடன் அவரது தாய் விருந்தா, மேலாளரும் உடன் சென்றுள்ளனர். படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் அபிஷேக் செல்லவில்லை. துபாயில் ஆடம்பர ஓட்டலில் அவர்களுக்கான அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரத்யாவுக்கு இது முதல் விமான பயணம் அல்ல. முதல் வெளிநாட்டு பயணம்தான். துபாயில் இருந்து 8ம் தேதி அனைவரும் மும்பை திரும்புகின்றனர்.

Comments