இந்திரா கல்லூரியில் கலைவிழா நடிகர் ஜீவா பங்கேற்பு!!!

Wednesday,April,18, 2012
திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா பொறியியல் கல்லூரியில் எக்டசி 2012 கலைவிழா கல்லூரி தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்திரா முன்னிலை வகித்தார். விழாவில் திரைப்பட நடிகர் ஜீவா கலந்து கொண்டு கலாச்சார விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்பு உள்ளது. சம்பளமும் அதிகம் கிடைக்கிறது. எனவே படித்து முடித்தவுடன் வேலைக்காக நீங்கள் வெளிநாடு செல்லாமல் நம் நாட்டிலேயே சேவை செய்ய வேண்டும்.

இவ்வாறு ஜீவா பேசினார்.

மாணவ - மாணவிகள் வேண்டுதலுக்கு இணங்க மேடையில் ஜீவா ஒரு பாட்டு பாடினார். மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

இவ்விழாவில் இயக்குனர் அமுதன், நடன இயக்குனர்கள் காய்திரி ரகுராம், தருண்குமார், நடிகர்கள் ஆர்த்தி கணேஷ், அஸ்வின் மகந்த், இசை அமைப்பாளர் அனிருத், பாடகர்கள் அர்சித் ஜனனி உள்பட பலர் பங்கேற்றனர். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் விழாவில் நடைபெற்றது.

Comments