நீதானே என் பொன் வசந்தம் படத்திற்காக இளையராஜா ஒரே நாளில் டியூன் போட்ட இளையராஜா!!!

Thursday, April, 19, 2012
கௌதம் மேனன் தற்போது இயக்கி வரும் நீதானே என் பொன் வசந்தம் படத்திற்காக இளையராஜா ஒரே நாளில் டியூன் போட்டுக் கொடுத்துள்ளார் என்று கூறி பெருமைப்படுகிறார் இயக்குனர்.

ஒவ்வொரு படம் தயாரிக்கும் போதும், இப்படத்திற்கு இளையராஜாவைத்தான் இசையமைப்பாளராக போட வேண்டும் என்று யோசிப்பேன். ஆனால், அது அமைந்ததில்லை. இந்த முறை, தைரியமாக போய் கேட்டுவிட்டேன்.

அவரும் படத்தைப் பார்த்துவிட்டு ஒரே நாளில் டியூன்களைப் போட்டுக் கொடுத்துவிட்டார் என்று ஆச்சரியத்துடன் சொல்கிறார் கௌதம் மேனன்.

அதேப்போல படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். அனைத்தும் ஒரே ஷெட்யூலில் 16 நாட்களிலேயே ஒலிப்பதிவு முடிந்துவிட்டது. இவ்வளவு வேகமாகக் கூட பணியாற்ற முடியுமா என்று வியந்து போயுள்ளேன் என்கிறார் இயக்குநர்.

Comments