கார்த்திகாவா? யார் அது? - ஹன்ஸிகா ஆவேசம்!!!

Saturday, April, 28, 2012
கார்த்திகாவா... யார் அது? அப்படி ஒருவரை எனக்கு தெரியவே தெரியாதே என்று தன் ஆத்திரத்தைக் கொட்டியிருக்கிறார் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் சென்சேஷன் ஹன்ஸிகா.

ஏன் இந்தக் கோபம்... அதுவும் பிரபல நடிகையான கார்த்திகாவை தெரியாது என்று கூறும் அளவுக்கு?

சுந்தர் சிதான். இவர் அடுத்து இயக்கும் புதிய படத்தில் முதலில் ஹீரோயினாக ஒப்பந்தமானவர் ஹன்ஸிகா. அப்புறம் என்ன நினைத்தாரோ, திடீரென்று ஹன்ஸிகாவை தூக்கிவிட்டு, அந்த இடத்துக்கு கார்த்திகாவை ஒப்பந்தம் செய்துவிட்டார்.

இதனால் பயங்கர கடுப்பாகிவிட்டாராம் ஹன்ஸிகா. எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போயிடும்... அப்ப பாத்துக்கறேன் என்று கமெண்ட் அடித்தாராம்.

ஹன்ஸிகாவிடம், சமீபத்தில் இந்த மோதல் குறித்து கேட்டபோது, "கார்த்திகாவா... யார் அது? அவருடன் நான் ஏன் சண்டை பிடிக்க வேண்டும். இது வதந்திதான். நான் தற்போது 'வேட்டை மன்னன்', 'சிங்கம்-2' படங்களில் நடிக்கிறேன். டெல்லி பெல்லி தமிழ் ரீமேக் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளேன். சினிமாவில் அவரவர்களுக்கென்று தனித்தனி இடங்கள் உள்ளன. அதை யாரும் தட்டி பறிக்க முடியாது," என்றார்.

Comments