அஜீத்துடன் நடித்ததால் டென்ஷன் : பார்வதி பேட்டி!!!

Friday, April, 13, 2012
அஜீத்துடன் நடிக்கும்போது டென்ஷனாக இருந்தது என்றார் பார்வதி ஓமனகுட்டன். ‘பில்லா 2படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் பார்வதி ஓமனகுட்டன். அவர் கூறியதாவது: உலக அழகி போட்டியில் பங்கேற்றதால்தான் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. மணப் பெண்களுக்கான ஆடை அணி வகுப்பு பேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொண்டேன். அந்நிகழ்ச்சிக்கு ‘பில்லா 2' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் வந்திருந்தார். மேடையில் என்னை பார்த்த அவர் பின்னர் சந்தித்து பேசினார். அப்போதுதான் அஜீத் ஜோடியாக நடிக்க கேட்டார். உடனே ஏற்றுக்கொண்டேன். அஜீத் முன்னணி நடிகர். அவருடன் நடிக்கும்போது மிகவும் டென்ஷனாகவும், நடுக்கமாகவும் இருந்தது. எனது பயத்தை புரிந்துகொண்ட அஜீத், என்னிடம் அன்பாக பழகி எனது தயக்கத்தை போக்கினார். மேலும் செட்டில் இருக்கும் எல்லோரிடமும் சகஜமாக பேசி அவர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார். ‘சினிமாவிலும், பேஷன் ஷோவிலும் பங்கேற்றதில் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்? என்கிறார்கள். வித¢தியாசம் எதுவுமில்லை. சிறுவயதிலிருந்தே நான் சினிமா ரசிகைதான். பேஷன் ஷோ விழாக்களில் பங்கேற்றதற்கு காரணமே நடிகை ஆவதற்கு அது பொருத்தமான வழியாக இருக்கும் என்பதால்தான். இதற்கு முன் உலக அழகிகள் இதுபோன்ற ஷோக்கள் மூலமே சினிமாவுக்கு வந்து பாப்புலர் ஆனார்கள்.

Comments