பிரபுதேவா பார்ட்டியில் பங்கேற்றது ஏன்? த்ரிஷா பதில்!

Wednesday,April,18, 2012
பிரபுதேவாவின் பார்த்டே பார்ட்டியில் பங்கேற்றது ஏன் என்பதற்கு த்ரிஷா பதிலளித¢தார். பிரபு தேவாநயன்தாரா இடையிலான காதல் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. இந¢நிலையில் சமீபத்தில் தனது பர்த்டே பார்ட்டியை கொண்டாடினார் பிரபு தேவா. இந்த பார்ட்டியில் திடீரென ஆஜராகி ஷாக் கொடுத்தார் த்ரிஷா. பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருக்கும் போஸையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி த்ரிஷா கூறியது: தெலுங்கில் எனக்கு பிரேக் தந்தவர் பிரபு தேவா. அவர் இயக்கிய முதல் 2 படங்களிலும் நான்தான் ஹீரோயின். அப்போது முதலே நாங்கள் நல்ல நண்பர்கள்.

இடையில் எப்போது சந்தித்தாலும் சகஜமாக பேசுவோம். நட்பு காரணமாக அவருக்கு பர்த்டே வாழ்த்து கூறுவது எனது கடமையாக நினைத்தேன். அதனால் அவரது பர்த்டே பார்ட்டிக்கு சென்றேன். அதற்குள் ஏகப்பட்ட கட்டுக்கதைகளை எழுதி வதந்தி பரப்புகிறார்கள். இது எனக்கு புதிதல்ல. இது பற்றி நான் கவலைப்படவும் இல்லை. இப்போது சமரன் படத்தில் விஷாலுடன் நடிக்கிறேன். எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. மற்ற விஷயங¢களுக்கு என்னிடம் நேரம் இல்லை. அது பற்றி யோசிப்பதும் கிடையாது. இவ்வாறு த்ரிஷா கூறினார்.

Comments