அன்று நயன்தாரா நேற்று த்‌ரிஷா - என்னப்பா நடக்குதிங்கே!!!

Thursday, April 12, 2012
நயன்தாராவும், த்‌ரிஷாவும் இல்லையென்றால் பத்தி‌ரிகைக்காரர்கள் என்னவாகியிருப்பார்கள்? நினைக்கவே பயமாக இருக்கிறது. நயன்தாராவின் காதலிலும், அவரது காதல் பி‌ரிவிலும்தான் கடந்த ஒரு வருடத்தை குதூகலமாக்கின பத்தி‌ரிகைகள். த்‌ரிஷா பற்றி சொல்லத் தேவையில்லை. கடற்கரைச் சாலையில் நள்ளிரவில் டான்ஸ் ஆடினார், ஹோட்டல் குளியலறையில் குளித்தார், விஷாலுக்கும் த்‌ரிஷாவுக்கும் காதல்... ஓ, எத்தனை எத்தனை தலைப்புச் செய்திகள். நியாயமாக இவர்கள் இருவருக்கும் பத்தி‌ரிகைகள் பாராட்டுவிழா எடுத்து லாபத்தில் பங்கு தந்திருக்க வேண்டும்.

ச‌ரி, விஷயத்துக்கு வருவோம்.

நயன்தாரா ஸ்ரீ ராமரா‌ஜ்‌ஜியம் படத்தின் இறுதி நாளன்று இயக்குனர் மற்றும் ஹீரோ பாலகிருஷ்ணா ஆகியோ‌ரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அத்துடன் பி‌ரிவுத் துயர் தாங்காமல் அழவும் செய்தார். அந்த அழுகைக்கு காரணம் இருந்தது. விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்ய இருந்ததால் ஸ்ரீ ராமரா‌ஜ்‌ஜியத்துடன் நடிப்பை துறக்க அப்போது அவர் முடிவு செய்திருந்தான். வாழ்க்கையின் கடைசி நாள் படப்பிடிப்பு என்பதால் அவரை மீறி வந்துவிட்டது அழுகை.

நயன்தாராவை தம்மு படப்பிடிப்பில் ‌ரிப்பீட் செய்தார் த்‌ரிஷா. இவர் ஒருவரையும் காதலிப்பதாக‌த் தெ‌ரியவில்லை. தம்மு இவ‌ரின் கடைசிப் படமும் அல்ல. பிறகு ஏன் அழுகை? ஆசி?

த்‌ரிஷாவும் திருமணம் செய்து செட்டிலாகப் போகிறார் என்று தெலுங்கு ஊடகங்கள் ஊகச் செய்தி வெளியிட்டுள்ளன. திருமணம் கன்ஃபார்ம் என்றிருந்த நயன்தாராவே காதலை உதறி நடிப்புக்கு திரும்பியிருக்கிறார். த்‌ரிஷாவாவது இப்போதைக்கு நடிப்பை விடுவதாவது.

எப்போ பாரு இவங்களுக்கு இதே பொழப்பா போச்சு.

Comments