தொடர்ந்து ஒரே ஹீரோவுடன் நடிப்பதா? படத்திலிருந்து வெளியேறினார் திவ்யா!!!

Friday, April, 06, 2012
பெங்களூர்::திவ்யாவின் நெருங்கிய தோழி ரூபா ஐயர். இவர் இயக்கும் சந்திரா என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் திவ்யா. ஹீரோவாக பிரேம் நடிக்கிறார். இதையறிந்ததும் திவ்யா பின்வாங்கினார். அப்படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினார். இதையடுத்து அவருக்கு பதிலாக புதிய ஹீரோயினை தேடிக்கொண்டிருக்கிறார் ரூபா. இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஹீரோவாக பிரேம் நடிப்பதால்தான் திவ்யா வெளியேறியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘ஜோதே ஜேதேயல்லிÕ உள்ளிட்ட 2 படங்களில் பிரேமுடன் நடித்திருக்கிறார் திவ்யா. இதில் ஒரு படம் சில்வர் ஜூப்ளி ஓடி வெற்றி பெற்றது. ஆனால் மற்றொரு படம் தோல்வியை தழுவியது. மீண்டும் அதே ஹீரோவுடன் நடித்தால் அதை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் ரூபா படத்திலிருந்து திவ்யா வெளியேறியதாக கூறப்படுகிறது.

Comments