மீண்டும் கவர்ச்சிக் களத்தில் நயன்தாரா!!!!

Wednesday,April,11,2012
நயன்தாரா அடுத்தடுத்து படங்களை ஒப்புக்கொள்வதிலும், கதைகளை கேட்பதிலும் பிஸியாக இருக்கிறார். தெலுங்கில் கோபிசந்துடன் நடிக்க துவங்கிவிட்ட நயன்தாரா அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யாவுடன் இணைந்து நடிப்பதாக பேசப்படுகிறது.

இந்நிலையில் கவர்ச்சி நடிகை வித்யா பாலன் நடித்த “தி டர்ட்டி பிக்சர்ஸ்” படத்தின் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக தெரிகிறது. நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை கதையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் டர்ட்டி பிக்சர்ஸ்.

சில்க் கதபாத்திரத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. தமிழிலும், தெலுங்கிலும் நடிக்க வித்யாபாலனிடம் கேட்ட போது அவர் மறுத்துவிட்டதாகவும் பேசப்படுகிறது. நயன்தாரா ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தில் சீதையாக நடித்திருந்தார்.

அந்த படத்தில் ரசிகர்கள் அவரை சீதையாகவே பார்த்ததால் இனி கவர்ச்சி வேடத்தில் நடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்கள். இந்நிலையில் நயன்தாராவிற்கு கவர்ச்சி வேடத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இந்த படத்தில் நயன்தாரா நடித்தால் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவர்ச்சி விருந்தாக இருக்கும்.

நயன்தாராவிற்கு கன்னடம், மளையாலம் ஆகிய மொழிகளிலும் மார்கெட் இருப்பதால் அந்த மொழிகளிலும் படம் ரீமேக் செய்யப்படலாம் என்பது கோடம்பாக்கத்தின் தற்போதைய சூடான பேச்சு.

Comments